Skip to main content

Posts

Showing posts from August, 2024

உருவமில்லாநிழல்VIII

பகுதி 8 நமக்கு நாமே . நிழல் : அந்த குரலிடம் பேசாதே . நான் : தாயத்தை இருக்கி கையில் பிடித்துக்கொண்டு உறக்கத்தில் இருந்தபடியே பேசினேன்.  நீ யாரு , நீ தானே அந்தக்குரல் . . நிழல் : இல்லை இல்லை.நான் உன்னுடைய நிழல் தான். பேரமணர் மலையிலேயே நான் உன்னைப் பிரிந்துவிட்டேன். நான் : என்ன சொல்கிறாய் ...!  என் நிழல் என்னுடன் தான் இருக்கிறது . மாலை நான்  தெருவிளக்கின் அருகே விளையாடும் பொழுது இருந்ததே... நிழல் : இல்லை,  இயற்கை வெளிச்சத்தில்  அதாவது சூரிய ஓளியில் அது அமைதியாகவும் நிலவொளியில் அது ஆக்ரோஷமாக இருக்கும். நான் உன்னை விட்டு வந்து வெகுநாள் ஆகிவிட்டது. பௌர்னமி அன்று மட்டும் தான் நான் நம்முள் வர வாய்ப்பு கிடைக்கும். ஆனால் கடைசி இரண்டு பௌர்னமி நம்மை சேரவிடாமல் தடுத்து விட்டது.  நான் : எப்படி? நிழல் : பௌர்னமி அன்று அந்த உருவமில்லா நிழல் உன் முன் தோன்றி , பயம் காட்டி உன்னை தூங்க விடாமல் செய்துவிடும். இன்றோ நீ தாயத்து இருக்கும் தைரியமோ தெரியவில்லை நீ தூங்கிவிட்டாய்.நானும் வந்துவிட்டேன். நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இனி நமக்கு நாமே தான் பாதுகாப்பு. நான் : அது சரி , ந...

உருவமில்லா_நிழல் VI

பகுதி6 சொர்க்கம் சித்தர் ஒரு பக்கம் இருக்க . பள்ளியில் படிப்பது கொஞ்சம் மீதி நேரம்  மயில் இரகை குட்டி போடுவது,  பட்டாசு செடி எச்சை தொட்டு வெடிப்பது, பென்சில் குப்பையில் ரப்பர் செய்வது,  ஜீபூம்பா பென்சில் ,  ரேடியம் பாலை பையில் வைத்து பார்ப்பது,  சக்திமான் , மாயா மச்சிந்திரா மற்றும் கார்டுன் நெட்வ்னர்க் (இது மட்டும் இப்பொழுது வரை பார்ப்பேன்.) என பல இருந்தது ஐந்தாம் வகுப்பு வரை . ஆறாம் வகுப்பிலிருந்து தான்   Parle-G shaktiman sticker பீரோவில் , பரிட்சை அட்டையிலும் இருக்கும், கீழ் உள்ள கரம் போட்டு விளையாடுவது  ஏரோப்ளேன் ஐஸ்பாய் WWE cards .... , Gems மிட்டாய்க்கு WWE sticker. எட்டாம் வகுப்பின் போது பாட்டுபுத்தகம் , பென்ஃபைட் ,  புக் கிரிக்கெட், ஹேன்ட் கிரிக்கெட் மற்றும் பல... சொர்க்கத்தில் இருந்த நாட்கள். இவை அனைத்தும் என் மனதில் இருக்கும் அந்த  பயத்தை கொஞ்சம் ஆசுவாசப்படுத்தியது. சொர்க்கத்திலிருந்து வெளிய வந்தநாள் எட்டாம் வகுப்பு முழு ஆண்டு விடுமுறையில் , எனது ஆயா ஊருக்கு சென்றிருந்தேன். பூங்காடு அருகில் கடையூர் என்ற கிராம...

பேரன்பு 2018 PERANBU

PERANBU 2018 இந்த படத்தை வாழ்நாளில் பார்க்கவே கூடாது என்று இருந்தேன் .ஆனால் என்னவோ திடீர் திருப்பம் " பேரன்பு " ராம் அவர்களின்  படைப்பை பார்த்து விட்டேன் . புணர்தலின் புனிதமும் வலியும் ,  இயலாமையின் உச்சமும். சில காட்சி கண்ணில் நெருப்பாய் எரிந்தது • தண்ணீர் குடத்தில் கையை விட்டு கீழே விழுந்த பாப்பா. • பவுடர் பூசிய முகம். ( அழகாக தெரியவும் , ஜன்னலில் இருந்து உலகத்தை பார்ப்பதும்) • பேடை தானாக வைக்க முயற்சி செய்வது. • டீவியில் ஹீரோவுக்கு முத்தம் கொடுத்தது. என பல காட்சி.  தந்தையாக அமுதவனின் • வயதுக்கு வந்த பிறகு தலையில் கைவைத்த போது • வீட்டை விட்டு வரும்பொழுது அந்த அழகான குழந்தையை  பார்ப்பது •பேடை தானே வைக்க போவதும் , பின்பு  பாப்பா தடுத்த போதும் •என் பொண்ணுக்கு கை கால் வர்ல ஆனா ஆசை இருக்கு . இன்னும் பல காட்சி ஹோமில் தவித்த பாப்பா,  பாடல் வரிகளால் இல்லை  முழுதும் வலிகளால் நிறைந்தது "இயற்கையின் தீர்ப்பில் நானே குற்றவாளியா அதை திருத்தி எழுத  தானே யாருமில்லையா செத்து போச்சு மனசு... செத்து போச்சு மனசு... என்ன போல ஜீவன் எல்லாம் ஒதுங்கி கொள்ள இடமும் இல்லை உ...

உருவமில்லா_நிழல் I

  PART 1           மீண்டும்  அந்த  உருவமில்லா  நிழலைக் கண்டேன் , இரவு 02:30 மணி அளவில் . கும் இருட்டு , திக்கென்று இதயம் படபடக்க உடல் குளிர்ந்து போக, ஒரே மயான அமைதி. நான்  ஒரு நிமிடம் ஆடாமல் ஆடிப்போனேன். நான்காவது மாடியில் உள்ள பாய்ஸ் ஹோஸ்டலில் எனது முதல் நாள் அனுபவம். ஏன்  என்றால் ஒரு தளத்தில் 20 அறைகள் உள்ளது ,  அனைத்து அறைக்கும் பொது கழிவறை தான்.  கட்டிட மேல் பார்வை ஓவல் வடிவக் கட்டிடம். நான் கழிவறைக்குப் போக , அறையை விட்டு வெளியே காலடி எடுத்து வைத்தேன் . அப்போழுது தான் நான் அந்தக் காட்சியை பார்த்தேன். ஒரு உருவமில்லா நிழலைப் பார்த்தேன் அந்த இருட்டில் .... நான்   10 ஆம் வகுப்பு முடித்து விட்டு எனது 11ஆம் வகுப்பை தொடங்க ஒரு சிறந்த பள்ளியில்  சேர்த்தார் எனது தந்தை.  என் நினைவில் நான்   சந்தோசமாக இருந்த காலம் ஆறாம் வகுப்பு வரை தான். ஏன் என்றால் நாளைய பற்றிக்கவலை , பொருட்கள் மீது கவனம் , காசின் மகிமை , வருமை , ஏழ்மை, நடுத்தர தந்தையின் வலி , எதைபற்றியும் விபரம் தெரியாத நாட்கள்.அது மற்று...

உருவமில்லா நிழல் VII

பகுதி7 அது கனவு இல்லை பாட்டி மடியில் உறங்கிய நான் , மதியம் திண்ணையில் இருந்து எழுந்தேன். பயத்தில் காய்ச்சல் வந்து விட்டது. அப்போது தான் ஆயா சொன்னாங்க வடக்குப்  பக்கம் தலையை வைத்து படுக்காத இப்படி தான் ஆகும் என்றார். எனக்கு திசையைப் பற்றி  என்ன தெரியும் . இதற்கு முன்பு ஆயா வீட்டில் விளையாடும் போதே தூங்கி விடுவேன் அவர்களே போய் படுக்க வைத்தார்கள்.ஆனால் அன்று நானே தூங்கி விட்டேன் திசை அறியாமல்.  இனிமேல் அப்படி படுக்க கூடாது என்று சொல்லி மசூதியில் பாடம் போட்டு வாங்க என்று ஆயா கூற, சென்றேன் தாத்தாவுடன் சைக்கிளில்.  மசூதியில்   வெள்ளை உடை, தொப்பி , முருகன் வாகனம் மயில் இறகுடன் இருந்தார்.  மயிலிறகில் மேலிருந்து முட்டி வரை தடவி பாடம் போட்டார் .  கோவிலில் வேஷ்டியுடன் பெரிய மீசை வைத்த பூசாரி கையில் விபூதி தலையிலும் வாயிலும்  போட்டு பட்டையை போட்டார். தாயத்தும் கட்டினார். தாத்தாவிடம் கேட்டேன்  அதிகாலை குப்பை அல்ல நான் வந்தேனா ? என்று.  தாத்தா :  ஆமாம் வந்தாய் , மாட்டு வண்டியில் அமர்ந்து இருந்தாய் . நான் குப்பை அள்ள இறங்கினேன். பத்த...