Skip to main content

உருவமில்லா_நிழல் VI

பகுதி6

சொர்க்கம்


சித்தர் ஒரு பக்கம் இருக்க . பள்ளியில் படிப்பது கொஞ்சம் மீதி நேரம் 
மயில் இரகை குட்டி போடுவது, 
பட்டாசு செடி எச்சை தொட்டு வெடிப்பது,
பென்சில் குப்பையில் ரப்பர் செய்வது, 
ஜீபூம்பா பென்சில் , 
ரேடியம் பாலை பையில் வைத்து பார்ப்பது, 
சக்திமான் , மாயா மச்சிந்திரா மற்றும் கார்டுன் நெட்வ்னர்க் (இது மட்டும் இப்பொழுது வரை பார்ப்பேன்.)
என பல இருந்தது ஐந்தாம் வகுப்பு வரை.

ஆறாம் வகுப்பிலிருந்து தான் 
Parle-G shaktiman sticker பீரோவில் , பரிட்சை அட்டையிலும் இருக்கும்,
கீழ் உள்ள கரம் போட்டு விளையாடுவது 

ஏரோப்ளேன்
ஐஸ்பாய்
WWE cards .... ,
Gems மிட்டாய்க்கு WWE sticker.

எட்டாம் வகுப்பின் போது
பாட்டுபுத்தகம் ,
பென்ஃபைட் ,
 புக் கிரிக்கெட்,
ஹேன்ட் கிரிக்கெட் மற்றும் பல...
சொர்க்கத்தில் இருந்த நாட்கள்.

இவை அனைத்தும் என் மனதில் இருக்கும் அந்த  பயத்தை கொஞ்சம் ஆசுவாசப்படுத்தியது.

சொர்க்கத்திலிருந்து வெளிய வந்தநாள் எட்டாம் வகுப்பு முழு ஆண்டு விடுமுறையில் , எனது ஆயா ஊருக்கு சென்றிருந்தேன். பூங்காடு அருகில் கடையூர் என்ற கிராமம். எனது தாத்தா அவர் வயலுக்கு குப்பையை (இயற்க்கை உரம் )எடுக்க மாட்டு வண்டியில் அதிகாலை ஐந்து மணிக்கு சென்றார் நானும் அவருடன் சென்றேன். நான் செய்த பெரிய தவறு அதுதான். குப்பையை எடுக்க ஏரியை கடந்து தான் போகனும், அங்கே தான் இடுகாடு உள்ளது. இடுகாடு ஒட்டி ஒரு ஐம்பது அடியில்தான்  பேரமணர் மலை பின்புறம் . எனது தாத்தா குப்பையை எடுக்க கீழ் இறங்கி கூடையில் சானியை அல்ல ஆரம்பித்தார். நான் வண்டியிலேயே அமர்ந்தபடி சுற்றி பார்த்தேன் .  இடுகாட்டில் கல்லரை மீது ஒரு உருவம் கண்கள் சிமிட்டிய படி அமர்ந்து இருந்தது . அந்த இருட்டிலும் கண்கள் நிலாவைப்போல் பளிச்சென்று இருந்தது. நான் பார்த்த பின்பு கண்கள் சிமிட்டாமல் என்னை உற்று பார்த்த படி அமர்ந்து இருந்தது. மாடும் கத்த ஆரம்பித்தது, நான் பயத்தில் தாத்தா என்று கத்தி வண்டியிலிருந்து கீழே விழுந்தேன். தாத்தாவையும் காணவில்லை மாட்டு வண்டியையும் காணவில்லை. கண்ணீருடன் கத்திக்கொண்டு ஒடினேன். ஆனால் ஒவ்வொரு அடி வைக்கும்போது அந்த உருவம்தான் என் அருகில் வந்துகொண்டிருந்தது. பயத்தில் கண்ணை மூடிக்கொண்டு கண்ணீருடன் ஓட ....
ஒரு கட்டத்தில் கண்ணை திறந்தேன் அந்த உருவம் கண் முன்னே இருந்தது. பயத்தில் உயிரே போகி விட்டது , நான் கண்ணை இருக்க மூடிக்கொண்டேன்.
 அந்த உருவம் என் கண்ணை தொட்ட பிறகு பூமி இரண்டாக பிளக்கும் சத்தம் நான் உணர்ந்தேன்.  நான் கத்திக்கொண்டே கீழே போக...

அந்த நிழல் கூரியது "நீ தான், நீயே தான் யாரிடமும் சொல்லாதே" .

நான் கத்தியபடி கண்ணை திறந்தால் ஆயா வீட்டில் திண்ணையில் படுத்திருந்தேன் .  மேலே பாம்பு , ஆயா அதை பார்த்து விட்டு டேய் தம்பி அது சாமி பாம்பு கத்தாதே என்று சாதாரணமாக  சொல்லிவிட்டு வரக்காப்பியை வைத்துச்சென்றார். ஆனால் ஆயா போன பிறகு அந்த பாம்பும் மறைந்தது.

படபடவென இருந்தது. 
காதில் நீ தான் என்று கேட்டுக்கொண்டிருந்தது , 
என்ன செய்வது தெரியாமல் ஓடி , ஆயா  மடியில்  போய் படுத்துக்கொண்டேன். பருப்பு புடைக்கும் சத்தம் கூட பயமாக இருந்தது. ஆயாவிடம் , தாத்தா எங்கே என்றேன். காட்டுக்கு குப்பை எடுக்க போயிருக்காருடா. அப்போ நானும் போனேனா? இல்ல இது கனவா? கருக் என்று இருந்தது. யாரிடமும் சொல்லாதே என்றும் சொல்லியது அந்த நிழல் . 

காதில் தொடங்கியது நீ தான் என்ற ஓலம். 

....தொடரும்...













Comments

Post a Comment

Popular posts from this blog

இன்று முற்பது 🥺 நாளை ஒன்று😊

30ஆம் தேதி .. வேலையை முடித்து விட்டு வரும் பொழுது. ரீசார்ஜ் கடையில் ஐம்பது ருபாய்க்கு ரீசார்ஜ் அட்டையை வாங்கி அட்டயை சுரண்டும் போது , தொலைபேசியின் மணி அடித்தது... அட்டையை சட்டைப் பையில் வைத்தபடி  தொலைபேசியில்.... "துணைவியார் :  என்னங்க குழந்தைக்கு சர்லாக்ஸ் , அப்புறம் அரிசி, பருப்பும் தீந்துடுச்சு வாங்கிட்டுவாங்க." காசு கம்மியா இருக்கே. ஈசி பன்ன கார்டு வாங்கியாச்சே... ரீசார்ஜ் கடையில் மீண்டும் குடுக்க போகும்பொழுது   யோ போயா வெளிய கார்டை வேகமா சுரண்டுனா நம்பர் கிழிஞ்சுதான் போகும் அது உன் தப்பு போயா வெளிய... என்று கடையில் சத்தம் வந்தது. உள்ளே நுழைந்து . எப்படி கேட்பது , யோசித்தபடி கார்டை கொடுத்தேன்  கடைக்கார தம்பி : அண்ணா கார்டு சுரண்டியாச்சேணா... எப்படி வாங்குறது.. சரி தம்பி என்று   திரும்பி வரும்பொழுது  சாலை ஓரத்தில் தேங்கி நிற்கும் நீரை தாண்டி நடைபாதையில் காலடி வைத்து அண்ணாச்சி கடையில் வழக்கம்போல் பாதி பணமும் மீதி கடனுக்கும் மளிகை பொருள்  வாங்கிவிட்டு செல்லும் வழியில்   ஹோட்டலில் வாங்க அண்ணா வாங்க  "புரோட்டா தோசை குஸ்கா சிக்கன...

சோறு போடுமா...!

சோறு போடுமா....! மனிதன் சாப்பிட்ட மூக்காலங்கள்   தாத்தா: உயிர்வாழ // உழவு செய்ய. அப்பா: பசிக்காக // படிப்பற்காக. பேரன்: ருசிக்காகவும்//ரீசார்ஜ் செய்யவுமா? அப்பொழுது , எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். நெற்கதிரை(நெல்+கதிர்) கதிரடிக்க வாசலில் கட்டு கட்டாக மலை போல் குவித்து வைத்து இருந்தார்கள். நான் அதன் மேல் ஏறி என் அழகான ஊரையும் ஏரிக்கரையும் எருமை மாடுகளையும் பார்த்து ரசித்ததும்,  கையில் குச்சியுடன் மேலே நின்று ஊருக்கே நான் ராஜா போல் ஆனந்தமாக நின்றது ஞாபகம். அப்பொழுது என் தாத்தா கதிரடிக்க, ஆயா அதை தூற்றி  நெல்லைப் பிரித்தவுடன்.  அதை அனைத்தும் முத்து மணியைப்போல் பார்த்து பார்த்து மூட்டையில் அள்ளி எடுத்து வைத்தார்.  நான் : சிதரிய நெல்லை எடுத்து வந்து மூட்டையில் போட்டேன். தாத்தா : குச்சிய கீழ போடு , அதை நான் அள்ளிக்கிறன் நீ போய் விளையாடு . நான் : ஏன் தாத்தா நான் எடுக்க கூடாதா? தாத்தா : நீயும் உன் அப்பா மாதிரி நல்லா படிச்சு நல்ல வேலைக்கு போகனும். இதெல்லாம் என்னோடு போகட்டும்.           தொலைவில் புல்லட் சத்தம்  கேட்டவுடன...

படைத்தவனை படைத்தவன்

படைத்தவனை படைத்தவன் இயற்கையால் படைக்கப்பட்டவன்தான்.இதில் செயற்கையாக கதைக் கூறி படைத் திரட்டி பெரியவன் யார் என்று, நிகழ்த்தமுயன்று பாடையேறி நிழலாய் போனவர்களையே வரலாறு நமக்குப் பாடம் எடுக்கிறது. பாடத்தைக் கவனிக்காமல் மதியிழந்து, அறத்துடன் வாழ்வதையே ஆச்சரியமாக பார்த்து விட்டார்கள்.  எடுத்து காட்டு : குடும்பத் தலைவன் தனது குடும்ப நலனுக்காக உழைப்பதை ஆச்சரியமாகவும், அம்மா குழந்தைக்கு தாய்பால் கொடுப்பது  இயற்கையானதோ அறத்துடன் வாழ்வதும் இயற்கையானது.  ஒரு எறும்பு பிறந்து , வாழ்நாள் முழுதும் உழைத்து உண்டு இறந்த பின் எதுவும் நடப்பதில்லை. அந்த உயிர்க்கு எப்படி ஆவியாக மாறவோ , மறு ஜென்மோ ஒன்றில்லை. ஆனால் வாழும் முறை வேறு . தனிதன்மையால் வேறுபடுகிறோமே தவிர எல்லா உயிர்களும் சமம்.   மண்ணில் இருந்து வந்த எல்லா உயிர்களும் மண்ணிலே போகிறது. யோசிக்கலாம் எறும்புக்கு கல்விக் கடன் ,கல்யாணக் கடன்,மளிகைக் கடன், வண்டிக் கடன் ,வீட்டுக் கடன்,தவணைக் கடன் இதில் சிலருக்கு காலைக்கடனும் இன்று சிக்கலானது. ஆனால் பசியால் வரும் வலி எல்லா உயிர்களுக்கு ஒன்று தான். ●அன்பு அரவணைப்பு ஆசை மகிழ்ச்சி காமம் து...