Skip to main content

உருவமில்லா_நிழல் I

  PART 1          மீண்டும்  அந்த  உருவமில்லா  நிழலைக் கண்டேன் , இரவு 02:30 மணி அளவில் . கும் இருட்டு , திக்கென்று இதயம் படபடக்க உடல் குளிர்ந்து போக, ஒரே மயான அமைதி. நான்  ஒரு நிமிடம் ஆடாமல் ஆடிப்போனேன். நான்காவது மாடியில் உள்ள பாய்ஸ் ஹோஸ்டலில் எனது முதல் நாள் அனுபவம். ஏன்  என்றால் ஒரு தளத்தில் 20 அறைகள் உள்ளது ,  அனைத்து அறைக்கும் பொது கழிவறை தான்.  கட்டிட மேல் பார்வை ஓவல் வடிவக் கட்டிடம். நான் கழிவறைக்குப் போக , அறையை விட்டு வெளியே காலடி எடுத்து வைத்தேன் . அப்போழுது தான் நான் அந்தக் காட்சியை பார்த்தேன். ஒரு உருவமில்லா நிழலைப் பார்த்தேன் அந்த இருட்டில் ....

நான்  10 ஆம் வகுப்பு முடித்து விட்டு எனது 11ஆம் வகுப்பை தொடங்க ஒரு சிறந்த பள்ளியில்  சேர்த்தார் எனது தந்தை. 

என் நினைவில் நான் சந்தோசமாக இருந்த காலம் ஆறாம் வகுப்பு வரை தான். ஏன் என்றால் நாளைய பற்றிக்கவலை , பொருட்கள் மீது கவனம் , காசின் மகிமை , வருமை , ஏழ்மை, நடுத்தர தந்தையின் வலி , எதைபற்றியும் விபரம் தெரியாத நாட்கள்.அது மற்றும் இல்லாமல் நான் மாலை வீட்டிற்கு சென்று விடுவேன் . வீட்டுலே அம்மா செய்த நொறுக்கு தீனி இருக்கும். 

முதல் சைக்கிள்
நான் முதல் முதலாய் என் அப்பா வாங்கி கொடுத்த சைக்கிளில் ஏரிய பொழுது. பழையப்பேருந்து நிலையம் அருகில் ஒரு பாய்க்கடையில் உள்ளே சென்ற சிகப்பு வண்ண சைக்கிள், அப்பா காசைக்கொடுத்து விட்டு வெளியே வந்தார்.  அருகில் உள்ள ஆட்டோவை அலைத்து வாடகை பேசினார் சைக்கிளை எடுத்து வர. எனது காலனி வரைக்கும் மூன்று சக்கர வண்டியில் வந்து நின்றது .அதன் பின் நான் என் சைக்கிளை எடுத்துக்கொண்டு ராஜா ஊர்வலம் போவது போல் நான் என் சைக்கிளில் என் காலனி முழுதும் சுற்றித் திரிந்தேன் . ஆன்றே சைக்கிளும் பஞ்சர் ஆனது. அப்பா விடம் பயந்து சொன்னேன் சிரித்தபடியே வா பஞ்சர் போடலாம் என்று அழைத்து சென்றார். 

அந்த பயம் தான் என்னவோ நான் சில விசயம் மறைக்க நினைத்த நாள் தொடங்கியது . 



.... தொடரும்...for PART2

Comments

Popular posts from this blog

உருவமில்லா_நிழல் XI

பகுதி XI நம் வாழ்வின் தொடக்கம் இது. ஓலைச்சுவடி படித்தப் பின்பு சித்தர் : உனது பிரச்சனைக்கு தீர்வு கிடைத்தது. நீ தேர்ந்தெடுக்க பட்டவன் ராஜா... ராஜா : அந்த நிழல் உருவம் அழைத்தது  சித்தர் : உன்னை பித்து பிடிக்கச் செய்வதற்காக. சித்தர் : ஐயன் கூறியது. எனக்கு நிலை மேம்படவும் உனக்கு துவக்க நிலை தொடங்க இந்த நிகழ்வு. ராஜா: ஒன்றும் புரியவில்லை. சித்தர் : ஒவ்வொரு நிலை கடக்கும்பொழுது நிறம் மூலமாக எனக்கு அறிகுறி காமிப்பான் என் ஐயன். ராஜா : ஐயா .... ஒரே குழப்பம். சித்தர் : ராஜா... தெளிவாக கவனி நான் மெய்யியல் கோட்பாட்டை அடைய பயிற்சி செய்துவருகிறேன். நாம் பார்த்தது சிவனை அல்ல மெய்யியல் கோட்பாட்டில் முனைவர் நிலை அடைந்தவர். அந்த மஞ்சள் புடவை கட்டிய பெண்மனி வந்தது என் கடை நிலையின் துவக்கம் , அதாவது உச்சநிலை தொடங்க வழி . நீ கருப்புசாமி வணங்கக் காரணம் உன் துவக்க நிலை தொடங்கத்தான். கருப்பு  நீலம் பச்சை   சிகப்பு   மஞ்சள்   வெள்ளை இந்த ஆறு வண்ணங்கள்  தான் படிநிலைகளாக உள்ளன முன்னேறி உச்சநிலை அடையவும்.      மக்களுக்கு செம்மையாகவும் நன்னெறிகளைப் போதித்து  மக்கள...

இன்று முற்பது 🥺 நாளை ஒன்று😊

30ஆம் தேதி .. வேலையை முடித்து விட்டு வரும் பொழுது. ரீசார்ஜ் கடையில் ஐம்பது ருபாய்க்கு ரீசார்ஜ் அட்டையை வாங்கி அட்டயை சுரண்டும் போது , தொலைபேசியின் மணி அடித்தது... அட்டையை சட்டைப் பையில் வைத்தபடி  தொலைபேசியில்.... "துணைவியார் :  என்னங்க குழந்தைக்கு சர்லாக்ஸ் , அப்புறம் அரிசி, பருப்பும் தீந்துடுச்சு வாங்கிட்டுவாங்க." காசு கம்மியா இருக்கே. ஈசி பன்ன கார்டு வாங்கியாச்சே... ரீசார்ஜ் கடையில் மீண்டும் குடுக்க போகும்பொழுது   யோ போயா வெளிய கார்டை வேகமா சுரண்டுனா நம்பர் கிழிஞ்சுதான் போகும் அது உன் தப்பு போயா வெளிய... என்று கடையில் சத்தம் வந்தது. உள்ளே நுழைந்து . எப்படி கேட்பது , யோசித்தபடி கார்டை கொடுத்தேன்  கடைக்கார தம்பி : அண்ணா கார்டு சுரண்டியாச்சேணா... எப்படி வாங்குறது.. சரி தம்பி என்று   திரும்பி வரும்பொழுது  சாலை ஓரத்தில் தேங்கி நிற்கும் நீரை தாண்டி நடைபாதையில் காலடி வைத்து அண்ணாச்சி கடையில் வழக்கம்போல் பாதி பணமும் மீதி கடனுக்கும் மளிகை பொருள்  வாங்கிவிட்டு செல்லும் வழியில்   ஹோட்டலில் வாங்க அண்ணா வாங்க  "புரோட்டா தோசை குஸ்கா சிக்கன...

NPE / நான் பார்த்தேன் என்னை.