Skip to main content

உருவமில்லா_நிழல் I

  PART 1          மீண்டும்  அந்த  உருவமில்லா  நிழலைக் கண்டேன் , இரவு 02:30 மணி அளவில் . கும் இருட்டு , திக்கென்று இதயம் படபடக்க உடல் குளிர்ந்து போக, ஒரே மயான அமைதி. நான்  ஒரு நிமிடம் ஆடாமல் ஆடிப்போனேன். நான்காவது மாடியில் உள்ள பாய்ஸ் ஹோஸ்டலில் எனது முதல் நாள் அனுபவம். ஏன்  என்றால் ஒரு தளத்தில் 20 அறைகள் உள்ளது ,  அனைத்து அறைக்கும் பொது கழிவறை தான்.  கட்டிட மேல் பார்வை ஓவல் வடிவக் கட்டிடம். நான் கழிவறைக்குப் போக , அறையை விட்டு வெளியே காலடி எடுத்து வைத்தேன் . அப்போழுது தான் நான் அந்தக் காட்சியை பார்த்தேன். ஒரு உருவமில்லா நிழலைப் பார்த்தேன் அந்த இருட்டில் ....

நான்  10 ஆம் வகுப்பு முடித்து விட்டு எனது 11ஆம் வகுப்பை தொடங்க ஒரு சிறந்த பள்ளியில்  சேர்த்தார் எனது தந்தை. 

என் நினைவில் நான் சந்தோசமாக இருந்த காலம் ஆறாம் வகுப்பு வரை தான். ஏன் என்றால் நாளைய பற்றிக்கவலை , பொருட்கள் மீது கவனம் , காசின் மகிமை , வருமை , ஏழ்மை, நடுத்தர தந்தையின் வலி , எதைபற்றியும் விபரம் தெரியாத நாட்கள்.அது மற்றும் இல்லாமல் நான் மாலை வீட்டிற்கு சென்று விடுவேன் . வீட்டுலே அம்மா செய்த நொறுக்கு தீனி இருக்கும். 

முதல் சைக்கிள்
நான் முதல் முதலாய் என் அப்பா வாங்கி கொடுத்த சைக்கிளில் ஏரிய பொழுது. பழையப்பேருந்து நிலையம் அருகில் ஒரு பாய்க்கடையில் உள்ளே சென்ற சிகப்பு வண்ண சைக்கிள், அப்பா காசைக்கொடுத்து விட்டு வெளியே வந்தார்.  அருகில் உள்ள ஆட்டோவை அலைத்து வாடகை பேசினார் சைக்கிளை எடுத்து வர. எனது காலனி வரைக்கும் மூன்று சக்கர வண்டியில் வந்து நின்றது .அதன் பின் நான் என் சைக்கிளை எடுத்துக்கொண்டு ராஜா ஊர்வலம் போவது போல் நான் என் சைக்கிளில் என் காலனி முழுதும் சுற்றித் திரிந்தேன் . ஆன்றே சைக்கிளும் பஞ்சர் ஆனது. அப்பா விடம் பயந்து சொன்னேன் சிரித்தபடியே வா பஞ்சர் போடலாம் என்று அழைத்து சென்றார். 

அந்த பயம் தான் என்னவோ நான் சில விசயம் மறைக்க நினைத்த நாள் தொடங்கியது . 



.... தொடரும்...for PART2

Comments

Popular posts from this blog

இன்று முற்பது 🥺 நாளை ஒன்று😊

30ஆம் தேதி .. வேலையை முடித்து விட்டு வரும் பொழுது. ரீசார்ஜ் கடையில் ஐம்பது ருபாய்க்கு ரீசார்ஜ் அட்டையை வாங்கி அட்டயை சுரண்டும் போது , தொலைபேசியின் மணி அடித்தது... அட்டையை சட்டைப் பையில் வைத்தபடி  தொலைபேசியில்.... "துணைவியார் :  என்னங்க குழந்தைக்கு சர்லாக்ஸ் , அப்புறம் அரிசி, பருப்பும் தீந்துடுச்சு வாங்கிட்டுவாங்க." காசு கம்மியா இருக்கே. ஈசி பன்ன கார்டு வாங்கியாச்சே... ரீசார்ஜ் கடையில் மீண்டும் குடுக்க போகும்பொழுது   யோ போயா வெளிய கார்டை வேகமா சுரண்டுனா நம்பர் கிழிஞ்சுதான் போகும் அது உன் தப்பு போயா வெளிய... என்று கடையில் சத்தம் வந்தது. உள்ளே நுழைந்து . எப்படி கேட்பது , யோசித்தபடி கார்டை கொடுத்தேன்  கடைக்கார தம்பி : அண்ணா கார்டு சுரண்டியாச்சேணா... எப்படி வாங்குறது.. சரி தம்பி என்று   திரும்பி வரும்பொழுது  சாலை ஓரத்தில் தேங்கி நிற்கும் நீரை தாண்டி நடைபாதையில் காலடி வைத்து அண்ணாச்சி கடையில் வழக்கம்போல் பாதி பணமும் மீதி கடனுக்கும் மளிகை பொருள்  வாங்கிவிட்டு செல்லும் வழியில்   ஹோட்டலில் வாங்க அண்ணா வாங்க  "புரோட்டா தோசை குஸ்கா சிக்கன...

சோறு போடுமா...!

சோறு போடுமா....! மனிதன் சாப்பிட்ட மூக்காலங்கள்   தாத்தா: உயிர்வாழ // உழவு செய்ய. அப்பா: பசிக்காக // படிப்பற்காக. பேரன்: ருசிக்காகவும்//ரீசார்ஜ் செய்யவுமா? அப்பொழுது , எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். நெற்கதிரை(நெல்+கதிர்) கதிரடிக்க வாசலில் கட்டு கட்டாக மலை போல் குவித்து வைத்து இருந்தார்கள். நான் அதன் மேல் ஏறி என் அழகான ஊரையும் ஏரிக்கரையும் எருமை மாடுகளையும் பார்த்து ரசித்ததும்,  கையில் குச்சியுடன் மேலே நின்று ஊருக்கே நான் ராஜா போல் ஆனந்தமாக நின்றது ஞாபகம். அப்பொழுது என் தாத்தா கதிரடிக்க, ஆயா அதை தூற்றி  நெல்லைப் பிரித்தவுடன்.  அதை அனைத்தும் முத்து மணியைப்போல் பார்த்து பார்த்து மூட்டையில் அள்ளி எடுத்து வைத்தார்.  நான் : சிதரிய நெல்லை எடுத்து வந்து மூட்டையில் போட்டேன். தாத்தா : குச்சிய கீழ போடு , அதை நான் அள்ளிக்கிறன் நீ போய் விளையாடு . நான் : ஏன் தாத்தா நான் எடுக்க கூடாதா? தாத்தா : நீயும் உன் அப்பா மாதிரி நல்லா படிச்சு நல்ல வேலைக்கு போகனும். இதெல்லாம் என்னோடு போகட்டும்.           தொலைவில் புல்லட் சத்தம்  கேட்டவுடன...

படைத்தவனை படைத்தவன்

படைத்தவனை படைத்தவன் இயற்கையால் படைக்கப்பட்டவன்தான்.இதில் செயற்கையாக கதைக் கூறி படைத் திரட்டி பெரியவன் யார் என்று, நிகழ்த்தமுயன்று பாடையேறி நிழலாய் போனவர்களையே வரலாறு நமக்குப் பாடம் எடுக்கிறது. பாடத்தைக் கவனிக்காமல் மதியிழந்து, அறத்துடன் வாழ்வதையே ஆச்சரியமாக பார்த்து விட்டார்கள்.  எடுத்து காட்டு : குடும்பத் தலைவன் தனது குடும்ப நலனுக்காக உழைப்பதை ஆச்சரியமாகவும், அம்மா குழந்தைக்கு தாய்பால் கொடுப்பது  இயற்கையானதோ அறத்துடன் வாழ்வதும் இயற்கையானது.  ஒரு எறும்பு பிறந்து , வாழ்நாள் முழுதும் உழைத்து உண்டு இறந்த பின் எதுவும் நடப்பதில்லை. அந்த உயிர்க்கு எப்படி ஆவியாக மாறவோ , மறு ஜென்மோ ஒன்றில்லை. ஆனால் வாழும் முறை வேறு . தனிதன்மையால் வேறுபடுகிறோமே தவிர எல்லா உயிர்களும் சமம்.   மண்ணில் இருந்து வந்த எல்லா உயிர்களும் மண்ணிலே போகிறது. யோசிக்கலாம் எறும்புக்கு கல்விக் கடன் ,கல்யாணக் கடன்,மளிகைக் கடன், வண்டிக் கடன் ,வீட்டுக் கடன்,தவணைக் கடன் இதில் சிலருக்கு காலைக்கடனும் இன்று சிக்கலானது. ஆனால் பசியால் வரும் வலி எல்லா உயிர்களுக்கு ஒன்று தான். ●அன்பு அரவணைப்பு ஆசை மகிழ்ச்சி காமம் து...