Skip to main content

உருவமில்லா_நிழல் X

பகுதி10 ..
துளைப்பவன் 

கண்களை மூடிய பின்பு வெளிச்சம் அதிகமாக தொடங்கியது வழக்கத்திற்கு மாறாக. திறந்து பார்த்தால் வேரு இடத்தில் இருந்தோம். புலித்தோல் அணிந்தபடி ஒருவர் நம் சித்தரைப் பார்த்து வாருங்கள் என்றார். நான் ஆச்சரியத்துடன் பார்த்தேன். லிங்கமும் காணவில்லை ஒலைச்சுவடியும் காணவில்லை.பின்பு சித்தர் என்னை அவரிடம் அறிமுகம் செய்தார் . 

அவர் கூறியது  : ராஜா , நான் துணையிருக்க சிக்கல்கள் பற்றி கவலை உனக்கு எதற்கு? என் கையில் கவலைகளை எல்லாம் கொடுத்துவிடு.

சித்தர் குரலில் "கண்களைத் திற" என்று கேட்டது.

கண் விழித்தால் மீண்டும் அதே இடத்தில் லிங்கத்தின் முன் இருந்தேன்.

ஐயா நாம் எங்குச் சென்றோம் . எப்படிச் சென்றோம்.ஒன்றும் புரியவில்லை

சித்தர் : அனைத்திலும் தேர்ச்சி பெற்ற சிவசித்தன். எங்களின் குரு. அனைத்து துரையிலும் தேர்ச்சி பெற்றவர். அவரைக்காண அவர் உலகிற்கு சென்றோம்.
“ 
அனி மாதி சித்திகளானவை கூறில்
அணுவில் அணுவின் பெருமையின் நேர்மை
இணுகாத வேகார் பரகாய மேவல்
அணுவத் தனையெங்குந் தானாத லென்றெட்டே
திருமூலரின் திருமந்திரம், 668வது பாடல்

//எண் பெருஞ் சித்திகளின் விளக்கம்
அணிமா - அணுவைப் போல் சிறிதான தேகத்தை அடைதல்.
மகிமா - மலையைப் போல் பெரிதாதல்.
இலகிமா - காற்றைப் போல் இலேசாய் இருத்தல்.
கரிமா - கனமாவது-மலைகளாலும், வாயுவினாலும் அசைக்க முடியாமல் பாரமாயிருத்தல்.
பிராப்தி - எல்லாப் பொருட்களையும் தன்வயப் படுத்துதல், மனத்தினால் நினைத்தவை யாவையும் அடைதல், அவற்றைப் பெறுதல்.
பிராகாமியம் - தன் உடலை விட்டு பிற உடலில் உட்புகுதல். (கூடு விட்டுக் கூடு பாய்தல்)
ஈசத்துவம் - நான்முகன் முதலான தேவர்களிடத்தும் தன் ஆணையைச் செலுத்தல்.
வசித்துவம் - அனைத்தையும் வசப்படுத்தல்.
இத்தகைய எண் பெருஞ் சித்திகளை எட்டு வகையான யோகாங்க பயிற்சியினால் சித்தர்கள் பெற்றனர்.//

அங்கு நாம் பார்த்தது , இந்த எட்டு சித்தங்களையும் தர்ச்சி பெற்றவர்.  உன் பிரச்சனைக்கு தீர்வு அந்த ஒலைச்சுவடியில் உள்ளது என்றார். 

நான் : அப்போ நான் பார்த்து ... சிவனா...சித்தரா...

சித்தர் : இல்லை எனது குரு , அவர்  அறிவு அளப்பரியது . அதாவது  ஒரு பிரபஞ்சத்தில் இறுதி என்று இருக்கும் என்றால் அந்த அளவு அவரது அறிவு. பின்னர் அவரது சக்தியைக் கண்டு சில சாமானியர்கள் வழிபட்டு இருக்கலாம். ஆனால் நான் வழிபடுவதற்கு காரணம் என் குரு . நான் அணிமா மகிமா  இந்த இரண்டின் சித்தத்தை அடைய இத்தனை வருடங்கள் ஆகிற்று . தேர்ச்சி பெற்றேன் . அனைத்து துரைகளிலும் அவர் அறிவு என்பது எரிகல்லைப் போல
 துளைத்துக் கொண்டு இறுதி வரைச்சென்று தேர்ச்சி பெற்றவர் ஆவார். 
                  ஆகையால் அவருக்கு இந்த பூமியில் நான்  எடுத்து பிறவியின் வெளிபாடே இந்த லிங்க வடிவம் எரிகல் போல பூமியில் இருந்த வந்து என்னை ஆசிர்வதிப்பார் என்று  இந்த சிலையை நான் வழிவபடுகிறேன். நம் முன்னோர்கள் சித்தம் அடைய முயற்சி செய்தவர்கள் பல. இதெல்லாம் தானாக உனக்குப் புரிய வரும்.

நான் : ஆனால் புலித்தோல் அணிந்து இருந்தாரே ? 

சித்தர் : உன் பிரச்சனைக்கு தீர்வு ஒலைச்சுவடியில் உள்ளது . முதலில் அதைப் பார்ப்போம் . 

சித்தர் அந்த ஓலைச்சுவடியை படிக்கத் தொடங்கினார்...

...தொடரும்...
















 

Comments

Popular posts from this blog

இன்று முற்பது 🥺 நாளை ஒன்று😊

30ஆம் தேதி .. வேலையை முடித்து விட்டு வரும் பொழுது. ரீசார்ஜ் கடையில் ஐம்பது ருபாய்க்கு ரீசார்ஜ் அட்டையை வாங்கி அட்டயை சுரண்டும் போது , தொலைபேசியின் மணி அடித்தது... அட்டையை சட்டைப் பையில் வைத்தபடி  தொலைபேசியில்.... "துணைவியார் :  என்னங்க குழந்தைக்கு சர்லாக்ஸ் , அப்புறம் அரிசி, பருப்பும் தீந்துடுச்சு வாங்கிட்டுவாங்க." காசு கம்மியா இருக்கே. ஈசி பன்ன கார்டு வாங்கியாச்சே... ரீசார்ஜ் கடையில் மீண்டும் குடுக்க போகும்பொழுது   யோ போயா வெளிய கார்டை வேகமா சுரண்டுனா நம்பர் கிழிஞ்சுதான் போகும் அது உன் தப்பு போயா வெளிய... என்று கடையில் சத்தம் வந்தது. உள்ளே நுழைந்து . எப்படி கேட்பது , யோசித்தபடி கார்டை கொடுத்தேன்  கடைக்கார தம்பி : அண்ணா கார்டு சுரண்டியாச்சேணா... எப்படி வாங்குறது.. சரி தம்பி என்று   திரும்பி வரும்பொழுது  சாலை ஓரத்தில் தேங்கி நிற்கும் நீரை தாண்டி நடைபாதையில் காலடி வைத்து அண்ணாச்சி கடையில் வழக்கம்போல் பாதி பணமும் மீதி கடனுக்கும் மளிகை பொருள்  வாங்கிவிட்டு செல்லும் வழியில்   ஹோட்டலில் வாங்க அண்ணா வாங்க  "புரோட்டா தோசை குஸ்கா சிக்கன...

சோறு போடுமா...!

சோறு போடுமா....! மனிதன் சாப்பிட்ட மூக்காலங்கள்   தாத்தா: உயிர்வாழ // உழவு செய்ய. அப்பா: பசிக்காக // படிப்பற்காக. பேரன்: ருசிக்காகவும்//ரீசார்ஜ் செய்யவுமா? அப்பொழுது , எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். நெற்கதிரை(நெல்+கதிர்) கதிரடிக்க வாசலில் கட்டு கட்டாக மலை போல் குவித்து வைத்து இருந்தார்கள். நான் அதன் மேல் ஏறி என் அழகான ஊரையும் ஏரிக்கரையும் எருமை மாடுகளையும் பார்த்து ரசித்ததும்,  கையில் குச்சியுடன் மேலே நின்று ஊருக்கே நான் ராஜா போல் ஆனந்தமாக நின்றது ஞாபகம். அப்பொழுது என் தாத்தா கதிரடிக்க, ஆயா அதை தூற்றி  நெல்லைப் பிரித்தவுடன்.  அதை அனைத்தும் முத்து மணியைப்போல் பார்த்து பார்த்து மூட்டையில் அள்ளி எடுத்து வைத்தார்.  நான் : சிதரிய நெல்லை எடுத்து வந்து மூட்டையில் போட்டேன். தாத்தா : குச்சிய கீழ போடு , அதை நான் அள்ளிக்கிறன் நீ போய் விளையாடு . நான் : ஏன் தாத்தா நான் எடுக்க கூடாதா? தாத்தா : நீயும் உன் அப்பா மாதிரி நல்லா படிச்சு நல்ல வேலைக்கு போகனும். இதெல்லாம் என்னோடு போகட்டும்.           தொலைவில் புல்லட் சத்தம்  கேட்டவுடன...

படைத்தவனை படைத்தவன்

படைத்தவனை படைத்தவன் இயற்கையால் படைக்கப்பட்டவன்தான்.இதில் செயற்கையாக கதைக் கூறி படைத் திரட்டி பெரியவன் யார் என்று, நிகழ்த்தமுயன்று பாடையேறி நிழலாய் போனவர்களையே வரலாறு நமக்குப் பாடம் எடுக்கிறது. பாடத்தைக் கவனிக்காமல் மதியிழந்து, அறத்துடன் வாழ்வதையே ஆச்சரியமாக பார்த்து விட்டார்கள்.  எடுத்து காட்டு : குடும்பத் தலைவன் தனது குடும்ப நலனுக்காக உழைப்பதை ஆச்சரியமாகவும், அம்மா குழந்தைக்கு தாய்பால் கொடுப்பது  இயற்கையானதோ அறத்துடன் வாழ்வதும் இயற்கையானது.  ஒரு எறும்பு பிறந்து , வாழ்நாள் முழுதும் உழைத்து உண்டு இறந்த பின் எதுவும் நடப்பதில்லை. அந்த உயிர்க்கு எப்படி ஆவியாக மாறவோ , மறு ஜென்மோ ஒன்றில்லை. ஆனால் வாழும் முறை வேறு . தனிதன்மையால் வேறுபடுகிறோமே தவிர எல்லா உயிர்களும் சமம்.   மண்ணில் இருந்து வந்த எல்லா உயிர்களும் மண்ணிலே போகிறது. யோசிக்கலாம் எறும்புக்கு கல்விக் கடன் ,கல்யாணக் கடன்,மளிகைக் கடன், வண்டிக் கடன் ,வீட்டுக் கடன்,தவணைக் கடன் இதில் சிலருக்கு காலைக்கடனும் இன்று சிக்கலானது. ஆனால் பசியால் வரும் வலி எல்லா உயிர்களுக்கு ஒன்று தான். ●அன்பு அரவணைப்பு ஆசை மகிழ்ச்சி காமம் து...