Skip to main content

உருவமில்லா_நிழல் IX

பகுதி 9 
அக்காவும் ஓலைச்சுவடியும் 

வர டீ-யைக் குடித்துவிட்டு , கிணற்றில் குளிக்கப் போவதாக பொய் சொல்லி பேரமணர் மலை அடிவாரம் சென்றேன் சித்தரைக்காண..

ஊர் எல்லையில் கம்பிரமாக நம்மை காக்கும் கருப்பு சாமியையும்,  ஏழு கன்னிமார்களையும் கும்பிட்டுவிட்டு மலைமேல் நோக்கி சென்றேன்.தூரத்தில் ஒரு அக்கா மஞ்சள் சேலையோடு தலைமுழுதும் மல்லிகைப் பூ வைத்தபடி ஒரு கையில் கம்போடும் இன்னொருக் கையில் பழைய மூட்டை இருப்பதை பார்த்தேன் . ஆடு மேய்ப்பவர் என்று எண்ணினேன். இதற்கு முன்பு ஊர் ஏரிக்கரையில் பார்த்த ஞாபகம் . "இருட்டும் முன் நான் சித்தரை பார்த்து எனக்கு தீர்வுகாண வேண்டும் என்று" எனது எண்ணோட்டமாக இருந்தது. அதனால் ஓடினேன்  அந்த அக்காவிடம் பேசத் தொடங்கினேன்.

நான் : அக்கா ,ஒர் உதவி உங்களுக்கு சாமியார் இருக்குமிடம் தெரியுமா..

அக்கா: சாமியாரா..?

நான் : இல்லை இல்லை சித்தர்..

அக்கா : சித்தரா.. இன்று பௌர்ணமி , அதனால் என்னப்பனை வழிபாடு செய்ய சென்றிருப்பார்.

நான் : புரியவில்லை அக்கா.

அக்கா : மலை மேலே லிங்கம் இருக்கும் , அங்கே போய் பார். 

நான் : அக்கா தனிமையில் செல்ல பயமாக உள்ளது , நீங்களும் என்னுடன் வாருங்கள் . அந்த மூட்டையை நான் எடுத்துக்கொள்கிறேன். என்றேன்.

அக்கா : நீ ஏன் சித்தரை பார்க்க துடிக்கிறாய்.

நான் : நடந்ததைக் கூறினேன். 

அக்கா : சிரித்த படி , சரி வா என்று லிங்கமிருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றார். . 
         
              போய் சித்தரைப்பார் என்றார் அந்த அக்கா. அத்துடன் அந்த அக்காவைக்  காணவில்லை திரும்பினால் யாரும் இல்லை ,பாதி வழியில்  அந்த மூட்டையை சுமந்தபடி நின்றேன். ஆச்சரியத்துடன் அங்கும் இங்கும் தேடினேன். ஒரு பெரியவர் வருவதை பார்த்தேன். அவரிடம் கேட்டேன் ...

நான் : ஐயா தாங்கள் ..

பெரியவர் : சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே..

நான் : சித்தரா நீங்கள்

பெரியவர் : நீ தேடியவன் நான் .நல்ல வேலை சரியாக   தான் வந்தாய். பின்பு அந்த மூட்டையை பார்த்து அவள் எங்கே என்றார்..

நான் : அந்த அக்காவை காணவில்லை , உங்களைக் காண வழிகாட்டியாக இருந்தவர்.

சித்தர் : சரி வா...  லிங்கேஸ்வரனைப் பார்ப்போம் 

நான் : ஐயா , அந்த அக்கா யார்...

சித்தர் : தினமும் நீ பார்ப்பவள் தான்,  உன்னையும் ஊரையும் காக்கும் கருப்புசாமி கோயிலில் உள்ள கன்னிமார். சிவ பூஜைக்கு மலர் எடுத்து வருவாள் எனக்கு. இன்று நீ எடுத்து வந்திருக்கிறாய்..

நான் : மெய் சிலிர்த்தபடி... நின்றேன். 

சித்தர் : சரி வா ... இந்த மலை பல ரகசியமுடையது. இது உனக்கு இரண்டாவது முறை அல்லவா.

நான்: ஆமாம் ஐயா ... எனது நிழல் கூறியது. உண்மையா?

சித்தர் : முதலில் பூஜையை செய்தப் பிறகு உன் விஷயத்திற்கு வருவோம்.  பௌர்ணமி நாள்,  திங்கட்கிழமை,  எல்லாம் நம் வசம் வரும் . மூட்டையை அவிழ்த்து பார். 

நான் :மூட்டையில்  செண்பகப்பூ , வெள்ளெருக்கு மாலை , அரளிப்பூ , தாமரைப்பூ இருந்தது மற்றும் ஒரு ஓலைச்சுவடி.


லிங்கத்தை பூக்களால் அலங்கரித்து 
         பூஜையைத் தொடங்கினோம்...

......தொடரும்....









Comments

Popular posts from this blog

இன்று முற்பது 🥺 நாளை ஒன்று😊

30ஆம் தேதி .. வேலையை முடித்து விட்டு வரும் பொழுது. ரீசார்ஜ் கடையில் ஐம்பது ருபாய்க்கு ரீசார்ஜ் அட்டையை வாங்கி அட்டயை சுரண்டும் போது , தொலைபேசியின் மணி அடித்தது... அட்டையை சட்டைப் பையில் வைத்தபடி  தொலைபேசியில்.... "துணைவியார் :  என்னங்க குழந்தைக்கு சர்லாக்ஸ் , அப்புறம் அரிசி, பருப்பும் தீந்துடுச்சு வாங்கிட்டுவாங்க." காசு கம்மியா இருக்கே. ஈசி பன்ன கார்டு வாங்கியாச்சே... ரீசார்ஜ் கடையில் மீண்டும் குடுக்க போகும்பொழுது   யோ போயா வெளிய கார்டை வேகமா சுரண்டுனா நம்பர் கிழிஞ்சுதான் போகும் அது உன் தப்பு போயா வெளிய... என்று கடையில் சத்தம் வந்தது. உள்ளே நுழைந்து . எப்படி கேட்பது , யோசித்தபடி கார்டை கொடுத்தேன்  கடைக்கார தம்பி : அண்ணா கார்டு சுரண்டியாச்சேணா... எப்படி வாங்குறது.. சரி தம்பி என்று   திரும்பி வரும்பொழுது  சாலை ஓரத்தில் தேங்கி நிற்கும் நீரை தாண்டி நடைபாதையில் காலடி வைத்து அண்ணாச்சி கடையில் வழக்கம்போல் பாதி பணமும் மீதி கடனுக்கும் மளிகை பொருள்  வாங்கிவிட்டு செல்லும் வழியில்   ஹோட்டலில் வாங்க அண்ணா வாங்க  "புரோட்டா தோசை குஸ்கா சிக்கன...

சோறு போடுமா...!

சோறு போடுமா....! மனிதன் சாப்பிட்ட மூக்காலங்கள்   தாத்தா: உயிர்வாழ // உழவு செய்ய. அப்பா: பசிக்காக // படிப்பற்காக. பேரன்: ருசிக்காகவும்//ரீசார்ஜ் செய்யவுமா? அப்பொழுது , எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். நெற்கதிரை(நெல்+கதிர்) கதிரடிக்க வாசலில் கட்டு கட்டாக மலை போல் குவித்து வைத்து இருந்தார்கள். நான் அதன் மேல் ஏறி என் அழகான ஊரையும் ஏரிக்கரையும் எருமை மாடுகளையும் பார்த்து ரசித்ததும்,  கையில் குச்சியுடன் மேலே நின்று ஊருக்கே நான் ராஜா போல் ஆனந்தமாக நின்றது ஞாபகம். அப்பொழுது என் தாத்தா கதிரடிக்க, ஆயா அதை தூற்றி  நெல்லைப் பிரித்தவுடன்.  அதை அனைத்தும் முத்து மணியைப்போல் பார்த்து பார்த்து மூட்டையில் அள்ளி எடுத்து வைத்தார்.  நான் : சிதரிய நெல்லை எடுத்து வந்து மூட்டையில் போட்டேன். தாத்தா : குச்சிய கீழ போடு , அதை நான் அள்ளிக்கிறன் நீ போய் விளையாடு . நான் : ஏன் தாத்தா நான் எடுக்க கூடாதா? தாத்தா : நீயும் உன் அப்பா மாதிரி நல்லா படிச்சு நல்ல வேலைக்கு போகனும். இதெல்லாம் என்னோடு போகட்டும்.           தொலைவில் புல்லட் சத்தம்  கேட்டவுடன...

படைத்தவனை படைத்தவன்

படைத்தவனை படைத்தவன் இயற்கையால் படைக்கப்பட்டவன்தான்.இதில் செயற்கையாக கதைக் கூறி படைத் திரட்டி பெரியவன் யார் என்று, நிகழ்த்தமுயன்று பாடையேறி நிழலாய் போனவர்களையே வரலாறு நமக்குப் பாடம் எடுக்கிறது. பாடத்தைக் கவனிக்காமல் மதியிழந்து, அறத்துடன் வாழ்வதையே ஆச்சரியமாக பார்த்து விட்டார்கள்.  எடுத்து காட்டு : குடும்பத் தலைவன் தனது குடும்ப நலனுக்காக உழைப்பதை ஆச்சரியமாகவும், அம்மா குழந்தைக்கு தாய்பால் கொடுப்பது  இயற்கையானதோ அறத்துடன் வாழ்வதும் இயற்கையானது.  ஒரு எறும்பு பிறந்து , வாழ்நாள் முழுதும் உழைத்து உண்டு இறந்த பின் எதுவும் நடப்பதில்லை. அந்த உயிர்க்கு எப்படி ஆவியாக மாறவோ , மறு ஜென்மோ ஒன்றில்லை. ஆனால் வாழும் முறை வேறு . தனிதன்மையால் வேறுபடுகிறோமே தவிர எல்லா உயிர்களும் சமம்.   மண்ணில் இருந்து வந்த எல்லா உயிர்களும் மண்ணிலே போகிறது. யோசிக்கலாம் எறும்புக்கு கல்விக் கடன் ,கல்யாணக் கடன்,மளிகைக் கடன், வண்டிக் கடன் ,வீட்டுக் கடன்,தவணைக் கடன் இதில் சிலருக்கு காலைக்கடனும் இன்று சிக்கலானது. ஆனால் பசியால் வரும் வலி எல்லா உயிர்களுக்கு ஒன்று தான். ●அன்பு அரவணைப்பு ஆசை மகிழ்ச்சி காமம் து...