Skip to main content

இன்று முற்பது 🥺 நாளை ஒன்று😊




30ஆம் தேதி..

வேலையை முடித்து விட்டு வரும் பொழுது. ரீசார்ஜ் கடையில் ஐம்பது ருபாய்க்கு ரீசார்ஜ் அட்டையை வாங்கி அட்டயை சுரண்டும் போது , தொலைபேசியின் மணி அடித்தது...

அட்டையை சட்டைப் பையில் வைத்தபடி 

தொலைபேசியில்....

"துணைவியார் :  என்னங்க குழந்தைக்கு சர்லாக்ஸ் , அப்புறம் அரிசி, பருப்பும் தீந்துடுச்சு வாங்கிட்டுவாங்க."

காசு கம்மியா இருக்கே. ஈசி பன்ன கார்டு வாங்கியாச்சே...

ரீசார்ஜ் கடையில் மீண்டும் குடுக்க போகும்பொழுது 

 யோ போயா வெளிய கார்டை வேகமா சுரண்டுனா நம்பர் கிழிஞ்சுதான் போகும் அது உன் தப்பு போயா வெளிய... என்று கடையில் சத்தம் வந்தது.

உள்ளே நுழைந்து .
எப்படி கேட்பது , யோசித்தபடி கார்டை கொடுத்தேன் 

கடைக்கார தம்பி : அண்ணா கார்டு சுரண்டியாச்சேணா... எப்படி வாங்குறது..

சரி தம்பி என்று   திரும்பி வரும்பொழுது 
சாலை ஓரத்தில் தேங்கி நிற்கும் நீரை தாண்டி நடைபாதையில் காலடி வைத்து அண்ணாச்சி கடையில் வழக்கம்போல் பாதி பணமும் மீதி கடனுக்கும் மளிகை பொருள்  வாங்கிவிட்டு செல்லும் வழியில்  

ஹோட்டலில் வாங்க அண்ணா வாங்க 

"புரோட்டா தோசை குஸ்கா சிக்கன்பிரியாணி மட்டன் குருமா ..."

சிரித்தபடி சர்லாக்ஸ் வாங்க கையில் காசு இல்ல , இதெல்லாம் எப்படி என்று சாலையை கடக்கும் போது காரில் இருந்து உணவு  பொட்டலங்களை வீசிய படி கடந்து சென்றது.  நடைமேடையில் ஏறி மெடிக்கலுக்கு போகும் வழியில் சிறுமியின் சத்தம் கேட்டது "மா பசிக்குது" என்று தனது அம்மாவிடம் அழுதுக்கொண்டு இருந்தது. அந்த பெண்மணி வீசிய பொட்டலங்களை எடுத்து பிரிக்க ... மீதி சிதரியபொட்டலத்தை எடுத்து கொடுத்தவுடன் எனக்கு கண்ணீர் தழும்பிய படி என்னுடைய குழந்தை ஞாபகம் வந்தது.கையில் காசு இல்லாமல் அமர்ந்தேன் அங்கேயே...

மனதில் ,
சாப்பிட கூப்பாடு போடும் கூட்டம் ஒரு பக்கம்
சாப்பாடு பொட்டலம் வீசும் கூட்டம் ஒரு பக்கம்
சாப்பாட்டுக்கு அழுகும் கூட்டம் ஒரு பக்கம்
என்று யோசித்தபடி 
தயக்கத்துடன் இருந்தேன்.

மெடிக்கல் ஐயா : தம்பி என்னாச்சு 

நான் : ஐயா ... அமைதியாகவே இருந்தேன்

என் கையில் சர்லாக்ஸ் பாட்டிலை தந்து விட்டு , நாளைக்கு 1ஆம் தேதி... என்று சிரித்தார். நீ சாலையை கடப்பதே இந்த சர்லக்ஸ் வாங்குவதற்கு தான் . அதனால் தான் நானே வந்தேன்...

வீட்டிற்கு போய் சேர இரவு பத்துமணி ஆகிற்று. சென்றதும் எனது காலணியை வாசலில் கழட்டியபின்  ,  லத்தியை ஆணியில் மாட்டிவிட்டு .  செல்ஃபோனை சார்ஜ் போட்டேன். காக்கிச்சட்டையில் இருந்த  கார்டை எடுத்து ரீசார்ஜ் செய்தேன்.  30ஆம் தேதியை கிழித்து விட்டு , காலண்டரைக் கண்டதும் மனம் ஆறுதல் அடைந்தது  1ஆம் தேதியை பார்த்து.





















Comments

Post a Comment

Popular posts from this blog

சோறு போடுமா...!

சோறு போடுமா....! மனிதன் சாப்பிட்ட மூக்காலங்கள்   தாத்தா: உயிர்வாழ // உழவு செய்ய. அப்பா: பசிக்காக // படிப்பற்காக. பேரன்: ருசிக்காகவும்//ரீசார்ஜ் செய்யவுமா? அப்பொழுது , எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். நெற்கதிரை(நெல்+கதிர்) கதிரடிக்க வாசலில் கட்டு கட்டாக மலை போல் குவித்து வைத்து இருந்தார்கள். நான் அதன் மேல் ஏறி என் அழகான ஊரையும் ஏரிக்கரையும் எருமை மாடுகளையும் பார்த்து ரசித்ததும்,  கையில் குச்சியுடன் மேலே நின்று ஊருக்கே நான் ராஜா போல் ஆனந்தமாக நின்றது ஞாபகம். அப்பொழுது என் தாத்தா கதிரடிக்க, ஆயா அதை தூற்றி  நெல்லைப் பிரித்தவுடன்.  அதை அனைத்தும் முத்து மணியைப்போல் பார்த்து பார்த்து மூட்டையில் அள்ளி எடுத்து வைத்தார்.  நான் : சிதரிய நெல்லை எடுத்து வந்து மூட்டையில் போட்டேன். தாத்தா : குச்சிய கீழ போடு , அதை நான் அள்ளிக்கிறன் நீ போய் விளையாடு . நான் : ஏன் தாத்தா நான் எடுக்க கூடாதா? தாத்தா : நீயும் உன் அப்பா மாதிரி நல்லா படிச்சு நல்ல வேலைக்கு போகனும். இதெல்லாம் என்னோடு போகட்டும்.           தொலைவில் புல்லட் சத்தம்  கேட்டவுடன...

படைத்தவனை படைத்தவன்

படைத்தவனை படைத்தவன் இயற்கையால் படைக்கப்பட்டவன்தான்.இதில் செயற்கையாக கதைக் கூறி படைத் திரட்டி பெரியவன் யார் என்று, நிகழ்த்தமுயன்று பாடையேறி நிழலாய் போனவர்களையே வரலாறு நமக்குப் பாடம் எடுக்கிறது. பாடத்தைக் கவனிக்காமல் மதியிழந்து, அறத்துடன் வாழ்வதையே ஆச்சரியமாக பார்த்து விட்டார்கள்.  எடுத்து காட்டு : குடும்பத் தலைவன் தனது குடும்ப நலனுக்காக உழைப்பதை ஆச்சரியமாகவும், அம்மா குழந்தைக்கு தாய்பால் கொடுப்பது  இயற்கையானதோ அறத்துடன் வாழ்வதும் இயற்கையானது.  ஒரு எறும்பு பிறந்து , வாழ்நாள் முழுதும் உழைத்து உண்டு இறந்த பின் எதுவும் நடப்பதில்லை. அந்த உயிர்க்கு எப்படி ஆவியாக மாறவோ , மறு ஜென்மோ ஒன்றில்லை. ஆனால் வாழும் முறை வேறு . தனிதன்மையால் வேறுபடுகிறோமே தவிர எல்லா உயிர்களும் சமம்.   மண்ணில் இருந்து வந்த எல்லா உயிர்களும் மண்ணிலே போகிறது. யோசிக்கலாம் எறும்புக்கு கல்விக் கடன் ,கல்யாணக் கடன்,மளிகைக் கடன், வண்டிக் கடன் ,வீட்டுக் கடன்,தவணைக் கடன் இதில் சிலருக்கு காலைக்கடனும் இன்று சிக்கலானது. ஆனால் பசியால் வரும் வலி எல்லா உயிர்களுக்கு ஒன்று தான். ●அன்பு அரவணைப்பு ஆசை மகிழ்ச்சி காமம் து...