Skip to main content

இன்று முற்பது 🥺 நாளை ஒன்று😊




30ஆம் தேதி..

வேலையை முடித்து விட்டு வரும் பொழுது. ரீசார்ஜ் கடையில் ஐம்பது ருபாய்க்கு ரீசார்ஜ் அட்டையை வாங்கி அட்டயை சுரண்டும் போது , தொலைபேசியின் மணி அடித்தது...

அட்டையை சட்டைப் பையில் வைத்தபடி 

தொலைபேசியில்....

"துணைவியார் :  என்னங்க குழந்தைக்கு சர்லாக்ஸ் , அப்புறம் அரிசி, பருப்பும் தீந்துடுச்சு வாங்கிட்டுவாங்க."

காசு கம்மியா இருக்கே. ஈசி பன்ன கார்டு வாங்கியாச்சே...

ரீசார்ஜ் கடையில் மீண்டும் குடுக்க போகும்பொழுது 

 யோ போயா வெளிய கார்டை வேகமா சுரண்டுனா நம்பர் கிழிஞ்சுதான் போகும் அது உன் தப்பு போயா வெளிய... என்று கடையில் சத்தம் வந்தது.

உள்ளே நுழைந்து .
எப்படி கேட்பது , யோசித்தபடி கார்டை கொடுத்தேன் 

கடைக்கார தம்பி : அண்ணா கார்டு சுரண்டியாச்சேணா... எப்படி வாங்குறது..

சரி தம்பி என்று   திரும்பி வரும்பொழுது 
சாலை ஓரத்தில் தேங்கி நிற்கும் நீரை தாண்டி நடைபாதையில் காலடி வைத்து அண்ணாச்சி கடையில் வழக்கம்போல் பாதி பணமும் மீதி கடனுக்கும் மளிகை பொருள்  வாங்கிவிட்டு செல்லும் வழியில்  

ஹோட்டலில் வாங்க அண்ணா வாங்க 

"புரோட்டா தோசை குஸ்கா சிக்கன்பிரியாணி மட்டன் குருமா ..."

சிரித்தபடி சர்லாக்ஸ் வாங்க கையில் காசு இல்ல , இதெல்லாம் எப்படி என்று சாலையை கடக்கும் போது காரில் இருந்து உணவு  பொட்டலங்களை வீசிய படி கடந்து சென்றது.  நடைமேடையில் ஏறி மெடிக்கலுக்கு போகும் வழியில் சிறுமியின் சத்தம் கேட்டது "மா பசிக்குது" என்று தனது அம்மாவிடம் அழுதுக்கொண்டு இருந்தது. அந்த பெண்மணி வீசிய பொட்டலங்களை எடுத்து பிரிக்க ... மீதி சிதரியபொட்டலத்தை எடுத்து கொடுத்தவுடன் எனக்கு கண்ணீர் தழும்பிய படி என்னுடைய குழந்தை ஞாபகம் வந்தது.கையில் காசு இல்லாமல் அமர்ந்தேன் அங்கேயே...

மனதில் ,
சாப்பிட கூப்பாடு போடும் கூட்டம் ஒரு பக்கம்
சாப்பாடு பொட்டலம் வீசும் கூட்டம் ஒரு பக்கம்
சாப்பாட்டுக்கு அழுகும் கூட்டம் ஒரு பக்கம்
என்று யோசித்தபடி 
தயக்கத்துடன் இருந்தேன்.

மெடிக்கல் ஐயா : தம்பி என்னாச்சு 

நான் : ஐயா ... அமைதியாகவே இருந்தேன்

என் கையில் சர்லாக்ஸ் பாட்டிலை தந்து விட்டு , நாளைக்கு 1ஆம் தேதி... என்று சிரித்தார். நீ சாலையை கடப்பதே இந்த சர்லக்ஸ் வாங்குவதற்கு தான் . அதனால் தான் நானே வந்தேன்...

வீட்டிற்கு போய் சேர இரவு பத்துமணி ஆகிற்று. சென்றதும் எனது காலணியை வாசலில் கழட்டியபின்  ,  லத்தியை ஆணியில் மாட்டிவிட்டு .  செல்ஃபோனை சார்ஜ் போட்டேன். காக்கிச்சட்டையில் இருந்த  கார்டை எடுத்து ரீசார்ஜ் செய்தேன்.  30ஆம் தேதியை கிழித்து விட்டு , காலண்டரைக் கண்டதும் மனம் ஆறுதல் அடைந்தது  1ஆம் தேதியை பார்த்து.





















Comments

Post a Comment

Popular posts from this blog

உருவமில்லா_நிழல் XI

பகுதி XI நம் வாழ்வின் தொடக்கம் இது. ஓலைச்சுவடி படித்தப் பின்பு சித்தர் : உனது பிரச்சனைக்கு தீர்வு கிடைத்தது. நீ தேர்ந்தெடுக்க பட்டவன் ராஜா... ராஜா : அந்த நிழல் உருவம் அழைத்தது  சித்தர் : உன்னை பித்து பிடிக்கச் செய்வதற்காக. சித்தர் : ஐயன் கூறியது. எனக்கு நிலை மேம்படவும் உனக்கு துவக்க நிலை தொடங்க இந்த நிகழ்வு. ராஜா: ஒன்றும் புரியவில்லை. சித்தர் : ஒவ்வொரு நிலை கடக்கும்பொழுது நிறம் மூலமாக எனக்கு அறிகுறி காமிப்பான் என் ஐயன். ராஜா : ஐயா .... ஒரே குழப்பம். சித்தர் : ராஜா... தெளிவாக கவனி நான் மெய்யியல் கோட்பாட்டை அடைய பயிற்சி செய்துவருகிறேன். நாம் பார்த்தது சிவனை அல்ல மெய்யியல் கோட்பாட்டில் முனைவர் நிலை அடைந்தவர். அந்த மஞ்சள் புடவை கட்டிய பெண்மனி வந்தது என் கடை நிலையின் துவக்கம் , அதாவது உச்சநிலை தொடங்க வழி . நீ கருப்புசாமி வணங்கக் காரணம் உன் துவக்க நிலை தொடங்கத்தான். கருப்பு  நீலம் பச்சை   சிகப்பு   மஞ்சள்   வெள்ளை இந்த ஆறு வண்ணங்கள்  தான் படிநிலைகளாக உள்ளன முன்னேறி உச்சநிலை அடையவும்.      மக்களுக்கு செம்மையாகவும் நன்னெறிகளைப் போதித்து  மக்கள...

NPE / நான் பார்த்தேன் என்னை.