Skip to main content

உருவமில்லா நிழல் VII

பகுதி7

அது கனவு இல்லை

பாட்டி மடியில் உறங்கிய நான் , மதியம் திண்ணையில் இருந்து எழுந்தேன். பயத்தில் காய்ச்சல் வந்து விட்டது. அப்போது தான் ஆயா சொன்னாங்க வடக்குப் பக்கம் தலையை வைத்து படுக்காத இப்படி தான் ஆகும் என்றார். எனக்கு திசையைப் பற்றி  என்ன தெரியும் . இதற்கு முன்பு ஆயா வீட்டில் விளையாடும் போதே தூங்கி விடுவேன் அவர்களே போய் படுக்க வைத்தார்கள்.ஆனால் அன்று நானே தூங்கி விட்டேன் திசை அறியாமல்.  இனிமேல் அப்படி படுக்க கூடாது என்று சொல்லி மசூதியில் பாடம் போட்டு வாங்க என்று ஆயா கூற, சென்றேன் தாத்தாவுடன் சைக்கிளில். 

மசூதியில் 
வெள்ளை உடை, தொப்பி , முருகன் வாகனம் மயில் இறகுடன் இருந்தார்.  மயிலிறகில் மேலிருந்து முட்டி வரை தடவி பாடம் போட்டார் . 

கோவிலில்
வேஷ்டியுடன் பெரிய மீசை வைத்த பூசாரி கையில் விபூதி தலையிலும் வாயிலும்  போட்டு பட்டையை போட்டார். தாயத்தும் கட்டினார்.

தாத்தாவிடம் கேட்டேன்  அதிகாலை குப்பை அல்ல நான் வந்தேனா ? என்று. 

தாத்தாஆமாம் வந்தாய் , மாட்டு வண்டியில் அமர்ந்து இருந்தாய் . நான் குப்பை அள்ள இறங்கினேன். பத்து கூடை அள்ளும்போதே உளரிய படி தூங்கிவிட்டாய். பின்பு உன்னை திண்ணையில் படுக்க வைத்தபிறகு நான் மறுபடியும் குப்பை அல்ல சென்றுவிட்டேன். அப்போ அது கனவு இல்லை.

பேசிக்கிட்டே  பணியார கடை வந்தது . தாத்தா மூனு ரூபாய் கையில் கொடுத்து இந்தா வாங்கிட்டு வா என்றார்.

பணியார பாட்டி : பெரிய பொட்டு , முட்டைக்கண்ணு காசை கொடுத்து பயந்தபடி பணியாரம் கேட்டேன்.
நீதானா அது டவுனில் படிக்கும் பேரன் .  குரல் பலமாக கேட்டபோது . அந்த கண்கள் என்முன் வந்து போனது. வேகமாக பணியாரத்தை வாங்கிக்கொண்டு சைக்கிளில் ஏறினேன். தாயத்தை இருக்கி பிடித்துக்கொண்டேன்.

வீட்டில் : 
 கயித்துக்கட்டிலை தலைகீழாக  போட்டு உட்கார்ந்து பணியாரத்தை தட்டில் வைத்து  ஆயா எனக்கு ஊட்டியபடி வானத்தை பார்த்து கதை பேசி அந்த இரவு கழிந்தது. மீண்டும் அதிகாலை நீ தான்... என்று காதில் கேட்டது .

அந்த குரல் : நான் உன்னை எங்கெல்லாம் தேடினேன் தெரியுமா.... 

நான் : தாயத்தை பிடித்துக்கொண்டே பேச தொடங்கினேன்.. யார் நீ..

....தொடரும்....




Comments

Post a Comment

Popular posts from this blog

இன்று முற்பது 🥺 நாளை ஒன்று😊

30ஆம் தேதி .. வேலையை முடித்து விட்டு வரும் பொழுது. ரீசார்ஜ் கடையில் ஐம்பது ருபாய்க்கு ரீசார்ஜ் அட்டையை வாங்கி அட்டயை சுரண்டும் போது , தொலைபேசியின் மணி அடித்தது... அட்டையை சட்டைப் பையில் வைத்தபடி  தொலைபேசியில்.... "துணைவியார் :  என்னங்க குழந்தைக்கு சர்லாக்ஸ் , அப்புறம் அரிசி, பருப்பும் தீந்துடுச்சு வாங்கிட்டுவாங்க." காசு கம்மியா இருக்கே. ஈசி பன்ன கார்டு வாங்கியாச்சே... ரீசார்ஜ் கடையில் மீண்டும் குடுக்க போகும்பொழுது   யோ போயா வெளிய கார்டை வேகமா சுரண்டுனா நம்பர் கிழிஞ்சுதான் போகும் அது உன் தப்பு போயா வெளிய... என்று கடையில் சத்தம் வந்தது. உள்ளே நுழைந்து . எப்படி கேட்பது , யோசித்தபடி கார்டை கொடுத்தேன்  கடைக்கார தம்பி : அண்ணா கார்டு சுரண்டியாச்சேணா... எப்படி வாங்குறது.. சரி தம்பி என்று   திரும்பி வரும்பொழுது  சாலை ஓரத்தில் தேங்கி நிற்கும் நீரை தாண்டி நடைபாதையில் காலடி வைத்து அண்ணாச்சி கடையில் வழக்கம்போல் பாதி பணமும் மீதி கடனுக்கும் மளிகை பொருள்  வாங்கிவிட்டு செல்லும் வழியில்   ஹோட்டலில் வாங்க அண்ணா வாங்க  "புரோட்டா தோசை குஸ்கா சிக்கன...

சோறு போடுமா...!

சோறு போடுமா....! மனிதன் சாப்பிட்ட மூக்காலங்கள்   தாத்தா: உயிர்வாழ // உழவு செய்ய. அப்பா: பசிக்காக // படிப்பற்காக. பேரன்: ருசிக்காகவும்//ரீசார்ஜ் செய்யவுமா? அப்பொழுது , எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். நெற்கதிரை(நெல்+கதிர்) கதிரடிக்க வாசலில் கட்டு கட்டாக மலை போல் குவித்து வைத்து இருந்தார்கள். நான் அதன் மேல் ஏறி என் அழகான ஊரையும் ஏரிக்கரையும் எருமை மாடுகளையும் பார்த்து ரசித்ததும்,  கையில் குச்சியுடன் மேலே நின்று ஊருக்கே நான் ராஜா போல் ஆனந்தமாக நின்றது ஞாபகம். அப்பொழுது என் தாத்தா கதிரடிக்க, ஆயா அதை தூற்றி  நெல்லைப் பிரித்தவுடன்.  அதை அனைத்தும் முத்து மணியைப்போல் பார்த்து பார்த்து மூட்டையில் அள்ளி எடுத்து வைத்தார்.  நான் : சிதரிய நெல்லை எடுத்து வந்து மூட்டையில் போட்டேன். தாத்தா : குச்சிய கீழ போடு , அதை நான் அள்ளிக்கிறன் நீ போய் விளையாடு . நான் : ஏன் தாத்தா நான் எடுக்க கூடாதா? தாத்தா : நீயும் உன் அப்பா மாதிரி நல்லா படிச்சு நல்ல வேலைக்கு போகனும். இதெல்லாம் என்னோடு போகட்டும்.           தொலைவில் புல்லட் சத்தம்  கேட்டவுடன...

படைத்தவனை படைத்தவன்

படைத்தவனை படைத்தவன் இயற்கையால் படைக்கப்பட்டவன்தான்.இதில் செயற்கையாக கதைக் கூறி படைத் திரட்டி பெரியவன் யார் என்று, நிகழ்த்தமுயன்று பாடையேறி நிழலாய் போனவர்களையே வரலாறு நமக்குப் பாடம் எடுக்கிறது. பாடத்தைக் கவனிக்காமல் மதியிழந்து, அறத்துடன் வாழ்வதையே ஆச்சரியமாக பார்த்து விட்டார்கள்.  எடுத்து காட்டு : குடும்பத் தலைவன் தனது குடும்ப நலனுக்காக உழைப்பதை ஆச்சரியமாகவும், அம்மா குழந்தைக்கு தாய்பால் கொடுப்பது  இயற்கையானதோ அறத்துடன் வாழ்வதும் இயற்கையானது.  ஒரு எறும்பு பிறந்து , வாழ்நாள் முழுதும் உழைத்து உண்டு இறந்த பின் எதுவும் நடப்பதில்லை. அந்த உயிர்க்கு எப்படி ஆவியாக மாறவோ , மறு ஜென்மோ ஒன்றில்லை. ஆனால் வாழும் முறை வேறு . தனிதன்மையால் வேறுபடுகிறோமே தவிர எல்லா உயிர்களும் சமம்.   மண்ணில் இருந்து வந்த எல்லா உயிர்களும் மண்ணிலே போகிறது. யோசிக்கலாம் எறும்புக்கு கல்விக் கடன் ,கல்யாணக் கடன்,மளிகைக் கடன், வண்டிக் கடன் ,வீட்டுக் கடன்,தவணைக் கடன் இதில் சிலருக்கு காலைக்கடனும் இன்று சிக்கலானது. ஆனால் பசியால் வரும் வலி எல்லா உயிர்களுக்கு ஒன்று தான். ●அன்பு அரவணைப்பு ஆசை மகிழ்ச்சி காமம் து...