Skip to main content

உருவமில்லா நிழல் VII

பகுதி7

அது கனவு இல்லை

பாட்டி மடியில் உறங்கிய நான் , மதியம் திண்ணையில் இருந்து எழுந்தேன். பயத்தில் காய்ச்சல் வந்து விட்டது. அப்போது தான் ஆயா சொன்னாங்க வடக்குப் பக்கம் தலையை வைத்து படுக்காத இப்படி தான் ஆகும் என்றார். எனக்கு திசையைப் பற்றி  என்ன தெரியும் . இதற்கு முன்பு ஆயா வீட்டில் விளையாடும் போதே தூங்கி விடுவேன் அவர்களே போய் படுக்க வைத்தார்கள்.ஆனால் அன்று நானே தூங்கி விட்டேன் திசை அறியாமல்.  இனிமேல் அப்படி படுக்க கூடாது என்று சொல்லி மசூதியில் பாடம் போட்டு வாங்க என்று ஆயா கூற, சென்றேன் தாத்தாவுடன் சைக்கிளில். 

மசூதியில் 
வெள்ளை உடை, தொப்பி , முருகன் வாகனம் மயில் இறகுடன் இருந்தார்.  மயிலிறகில் மேலிருந்து முட்டி வரை தடவி பாடம் போட்டார் . 

கோவிலில்
வேஷ்டியுடன் பெரிய மீசை வைத்த பூசாரி கையில் விபூதி தலையிலும் வாயிலும்  போட்டு பட்டையை போட்டார். தாயத்தும் கட்டினார்.

தாத்தாவிடம் கேட்டேன்  அதிகாலை குப்பை அல்ல நான் வந்தேனா ? என்று. 

தாத்தாஆமாம் வந்தாய் , மாட்டு வண்டியில் அமர்ந்து இருந்தாய் . நான் குப்பை அள்ள இறங்கினேன். பத்து கூடை அள்ளும்போதே உளரிய படி தூங்கிவிட்டாய். பின்பு உன்னை திண்ணையில் படுக்க வைத்தபிறகு நான் மறுபடியும் குப்பை அல்ல சென்றுவிட்டேன். அப்போ அது கனவு இல்லை.

பேசிக்கிட்டே  பணியார கடை வந்தது . தாத்தா மூனு ரூபாய் கையில் கொடுத்து இந்தா வாங்கிட்டு வா என்றார்.

பணியார பாட்டி : பெரிய பொட்டு , முட்டைக்கண்ணு காசை கொடுத்து பயந்தபடி பணியாரம் கேட்டேன்.
நீதானா அது டவுனில் படிக்கும் பேரன் .  குரல் பலமாக கேட்டபோது . அந்த கண்கள் என்முன் வந்து போனது. வேகமாக பணியாரத்தை வாங்கிக்கொண்டு சைக்கிளில் ஏறினேன். தாயத்தை இருக்கி பிடித்துக்கொண்டேன்.

வீட்டில் : 
 கயித்துக்கட்டிலை தலைகீழாக  போட்டு உட்கார்ந்து பணியாரத்தை தட்டில் வைத்து  ஆயா எனக்கு ஊட்டியபடி வானத்தை பார்த்து கதை பேசி அந்த இரவு கழிந்தது. மீண்டும் அதிகாலை நீ தான்... என்று காதில் கேட்டது .

அந்த குரல் : நான் உன்னை எங்கெல்லாம் தேடினேன் தெரியுமா.... 

நான் : தாயத்தை பிடித்துக்கொண்டே பேச தொடங்கினேன்.. யார் நீ..

....தொடரும்....




Comments

Post a Comment

Popular posts from this blog

உருவமில்லா_நிழல் XI

பகுதி XI நம் வாழ்வின் தொடக்கம் இது. ஓலைச்சுவடி படித்தப் பின்பு சித்தர் : உனது பிரச்சனைக்கு தீர்வு கிடைத்தது. நீ தேர்ந்தெடுக்க பட்டவன் ராஜா... ராஜா : அந்த நிழல் உருவம் அழைத்தது  சித்தர் : உன்னை பித்து பிடிக்கச் செய்வதற்காக. சித்தர் : ஐயன் கூறியது. எனக்கு நிலை மேம்படவும் உனக்கு துவக்க நிலை தொடங்க இந்த நிகழ்வு. ராஜா: ஒன்றும் புரியவில்லை. சித்தர் : ஒவ்வொரு நிலை கடக்கும்பொழுது நிறம் மூலமாக எனக்கு அறிகுறி காமிப்பான் என் ஐயன். ராஜா : ஐயா .... ஒரே குழப்பம். சித்தர் : ராஜா... தெளிவாக கவனி நான் மெய்யியல் கோட்பாட்டை அடைய பயிற்சி செய்துவருகிறேன். நாம் பார்த்தது சிவனை அல்ல மெய்யியல் கோட்பாட்டில் முனைவர் நிலை அடைந்தவர். அந்த மஞ்சள் புடவை கட்டிய பெண்மனி வந்தது என் கடை நிலையின் துவக்கம் , அதாவது உச்சநிலை தொடங்க வழி . நீ கருப்புசாமி வணங்கக் காரணம் உன் துவக்க நிலை தொடங்கத்தான். கருப்பு  நீலம் பச்சை   சிகப்பு   மஞ்சள்   வெள்ளை இந்த ஆறு வண்ணங்கள்  தான் படிநிலைகளாக உள்ளன முன்னேறி உச்சநிலை அடையவும்.      மக்களுக்கு செம்மையாகவும் நன்னெறிகளைப் போதித்து  மக்கள...

இன்று முற்பது 🥺 நாளை ஒன்று😊

30ஆம் தேதி .. வேலையை முடித்து விட்டு வரும் பொழுது. ரீசார்ஜ் கடையில் ஐம்பது ருபாய்க்கு ரீசார்ஜ் அட்டையை வாங்கி அட்டயை சுரண்டும் போது , தொலைபேசியின் மணி அடித்தது... அட்டையை சட்டைப் பையில் வைத்தபடி  தொலைபேசியில்.... "துணைவியார் :  என்னங்க குழந்தைக்கு சர்லாக்ஸ் , அப்புறம் அரிசி, பருப்பும் தீந்துடுச்சு வாங்கிட்டுவாங்க." காசு கம்மியா இருக்கே. ஈசி பன்ன கார்டு வாங்கியாச்சே... ரீசார்ஜ் கடையில் மீண்டும் குடுக்க போகும்பொழுது   யோ போயா வெளிய கார்டை வேகமா சுரண்டுனா நம்பர் கிழிஞ்சுதான் போகும் அது உன் தப்பு போயா வெளிய... என்று கடையில் சத்தம் வந்தது. உள்ளே நுழைந்து . எப்படி கேட்பது , யோசித்தபடி கார்டை கொடுத்தேன்  கடைக்கார தம்பி : அண்ணா கார்டு சுரண்டியாச்சேணா... எப்படி வாங்குறது.. சரி தம்பி என்று   திரும்பி வரும்பொழுது  சாலை ஓரத்தில் தேங்கி நிற்கும் நீரை தாண்டி நடைபாதையில் காலடி வைத்து அண்ணாச்சி கடையில் வழக்கம்போல் பாதி பணமும் மீதி கடனுக்கும் மளிகை பொருள்  வாங்கிவிட்டு செல்லும் வழியில்   ஹோட்டலில் வாங்க அண்ணா வாங்க  "புரோட்டா தோசை குஸ்கா சிக்கன...

NPE / நான் பார்த்தேன் என்னை.