Skip to main content

பேரன்பு 2018 PERANBU





PERANBU 2018
இந்த படத்தை வாழ்நாளில் பார்க்கவே கூடாது என்று இருந்தேன் .ஆனால் என்னவோ திடீர் திருப்பம்
"பேரன்பு" ராம் அவர்களின் 
படைப்பை பார்த்து விட்டேன் .
புணர்தலின் புனிதமும் வலியும் , 
இயலாமையின் உச்சமும்.

சில காட்சி கண்ணில் நெருப்பாய் எரிந்தது
• தண்ணீர் குடத்தில் கையை விட்டு கீழே விழுந்த பாப்பா.
• பவுடர் பூசிய முகம். ( அழகாக தெரியவும் , ஜன்னலில் இருந்து உலகத்தை பார்ப்பதும்)
• பேடை தானாக வைக்க முயற்சி செய்வது.
• டீவியில் ஹீரோவுக்கு முத்தம் கொடுத்தது.
என பல காட்சி. 

தந்தையாக அமுதவனின்
• வயதுக்கு வந்த பிறகு தலையில் கைவைத்த போது
• வீட்டை விட்டு வரும்பொழுது அந்த அழகான குழந்தையை  பார்ப்பது
•பேடை தானே வைக்க போவதும் , பின்பு  பாப்பா தடுத்த போதும்
•என் பொண்ணுக்கு கை கால் வர்ல ஆனா ஆசை இருக்கு .
இன்னும் பல காட்சி

ஹோமில் தவித்த பாப்பா, 

பாடல்வரிகளால் இல்லை 
முழுதும் வலிகளால் நிறைந்தது

"இயற்கையின் தீர்ப்பில்
நானே குற்றவாளியா
அதை திருத்தி எழுத 
தானே யாருமில்லையா
செத்து போச்சு மனசு...
செத்து போச்சு மனசு...

என்ன போல ஜீவன் எல்லாம்
ஒதுங்கி கொள்ள இடமும் இல்லை
உன்ன விட வாழ்வில் இங்கு
எனக்குன்னு யாரும் இல்லை"

ஆனந்தமான காட்சியைப்பற்றி எதையும் கூற ஆசையில்லை


மீரா உடலால் பலமுறை காமம் கொண்டாலும் அந்த ஆட்டோவில் அமுதவனுடன் வரும்போது அந்த முகம் கூரியது மனதால் காதல் வெட்கம் எப்படி இருக்கும் என்று. 

அமுதவனுக்கும் பாப்பாவிற்கும் மீரா கிடைத்தாள்.
ஆனால் மீரா இல்லாத எத்தனையோ பாப்பாக்கள் இருக்கின்றன...

என்  எண்ணோட்டம்
நான் படத்தை பார்த்தப் பிறகு எனக்கு ஒரு ஆயிரம் புத்தகத்தைப் படித்த மாதிரி இருந்தது. 

இந்தப் படம் எனக்கு வாழ்க்கைப் பாடம்.

பொறுமை
ஒழுக்கம்
கடமை//
அன்பு
அரவணைப்பு
ஆதரவு.
இன்னும் பல பாடங்கள் அது எனக்கு மட்டும் போதும்.

இயக்குநர் ராம் கண்களால் பார்க்கும் பார்வை அழகான எதார்த்தமான உண்மையான பார்வை.












Comments

Post a Comment

Popular posts from this blog

உருவமில்லா_நிழல் XI

பகுதி XI நம் வாழ்வின் தொடக்கம் இது. ஓலைச்சுவடி படித்தப் பின்பு சித்தர் : உனது பிரச்சனைக்கு தீர்வு கிடைத்தது. நீ தேர்ந்தெடுக்க பட்டவன் ராஜா... ராஜா : அந்த நிழல் உருவம் அழைத்தது  சித்தர் : உன்னை பித்து பிடிக்கச் செய்வதற்காக. சித்தர் : ஐயன் கூறியது. எனக்கு நிலை மேம்படவும் உனக்கு துவக்க நிலை தொடங்க இந்த நிகழ்வு. ராஜா: ஒன்றும் புரியவில்லை. சித்தர் : ஒவ்வொரு நிலை கடக்கும்பொழுது நிறம் மூலமாக எனக்கு அறிகுறி காமிப்பான் என் ஐயன். ராஜா : ஐயா .... ஒரே குழப்பம். சித்தர் : ராஜா... தெளிவாக கவனி நான் மெய்யியல் கோட்பாட்டை அடைய பயிற்சி செய்துவருகிறேன். நாம் பார்த்தது சிவனை அல்ல மெய்யியல் கோட்பாட்டில் முனைவர் நிலை அடைந்தவர். அந்த மஞ்சள் புடவை கட்டிய பெண்மனி வந்தது என் கடை நிலையின் துவக்கம் , அதாவது உச்சநிலை தொடங்க வழி . நீ கருப்புசாமி வணங்கக் காரணம் உன் துவக்க நிலை தொடங்கத்தான். கருப்பு  நீலம் பச்சை   சிகப்பு   மஞ்சள்   வெள்ளை இந்த ஆறு வண்ணங்கள்  தான் படிநிலைகளாக உள்ளன முன்னேறி உச்சநிலை அடையவும்.      மக்களுக்கு செம்மையாகவும் நன்னெறிகளைப் போதித்து  மக்கள...

இன்று முற்பது 🥺 நாளை ஒன்று😊

30ஆம் தேதி .. வேலையை முடித்து விட்டு வரும் பொழுது. ரீசார்ஜ் கடையில் ஐம்பது ருபாய்க்கு ரீசார்ஜ் அட்டையை வாங்கி அட்டயை சுரண்டும் போது , தொலைபேசியின் மணி அடித்தது... அட்டையை சட்டைப் பையில் வைத்தபடி  தொலைபேசியில்.... "துணைவியார் :  என்னங்க குழந்தைக்கு சர்லாக்ஸ் , அப்புறம் அரிசி, பருப்பும் தீந்துடுச்சு வாங்கிட்டுவாங்க." காசு கம்மியா இருக்கே. ஈசி பன்ன கார்டு வாங்கியாச்சே... ரீசார்ஜ் கடையில் மீண்டும் குடுக்க போகும்பொழுது   யோ போயா வெளிய கார்டை வேகமா சுரண்டுனா நம்பர் கிழிஞ்சுதான் போகும் அது உன் தப்பு போயா வெளிய... என்று கடையில் சத்தம் வந்தது. உள்ளே நுழைந்து . எப்படி கேட்பது , யோசித்தபடி கார்டை கொடுத்தேன்  கடைக்கார தம்பி : அண்ணா கார்டு சுரண்டியாச்சேணா... எப்படி வாங்குறது.. சரி தம்பி என்று   திரும்பி வரும்பொழுது  சாலை ஓரத்தில் தேங்கி நிற்கும் நீரை தாண்டி நடைபாதையில் காலடி வைத்து அண்ணாச்சி கடையில் வழக்கம்போல் பாதி பணமும் மீதி கடனுக்கும் மளிகை பொருள்  வாங்கிவிட்டு செல்லும் வழியில்   ஹோட்டலில் வாங்க அண்ணா வாங்க  "புரோட்டா தோசை குஸ்கா சிக்கன...

NPE / நான் பார்த்தேன் என்னை.