பகுதி XI நம் வாழ்வின் தொடக்கம் இது. ஓலைச்சுவடி படித்தப் பின்பு சித்தர் : உனது பிரச்சனைக்கு தீர்வு கிடைத்தது. நீ தேர்ந்தெடுக்க பட்டவன் ராஜா... ராஜா : அந்த நிழல் உருவம் அழைத்தது சித்தர் : உன்னை பித்து பிடிக்கச் செய்வதற்காக. சித்தர் : ஐயன் கூறியது. எனக்கு நிலை மேம்படவும் உனக்கு துவக்க நிலை தொடங்க இந்த நிகழ்வு. ராஜா: ஒன்றும் புரியவில்லை. சித்தர் : ஒவ்வொரு நிலை கடக்கும்பொழுது நிறம் மூலமாக எனக்கு அறிகுறி காமிப்பான் என் ஐயன். ராஜா : ஐயா .... ஒரே குழப்பம். சித்தர் : ராஜா... தெளிவாக கவனி நான் மெய்யியல் கோட்பாட்டை அடைய பயிற்சி செய்துவருகிறேன். நாம் பார்த்தது சிவனை அல்ல மெய்யியல் கோட்பாட்டில் முனைவர் நிலை அடைந்தவர். அந்த மஞ்சள் புடவை கட்டிய பெண்மனி வந்தது என் கடை நிலையின் துவக்கம் , அதாவது உச்சநிலை தொடங்க வழி . நீ கருப்புசாமி வணங்கக் காரணம் உன் துவக்க நிலை தொடங்கத்தான். கருப்பு நீலம் பச்சை சிகப்பு மஞ்சள் வெள்ளை இந்த ஆறு வண்ணங்கள் தான் படிநிலைகளாக உள்ளன முன்னேறி உச்சநிலை அடையவும். மக்களுக்கு செம்மையாகவும் நன்னெறிகளைப் போதித்து மக்கள...
பகுதி10 .. துளைப்பவன் கண்களை மூடிய பின்பு வெளிச்சம் அதிகமாக தொடங்கியது வழக்கத்திற்கு மாறாக. திறந்து பார்த்தால் வேரு இடத்தில் இருந்தோம். புலித்தோல் அணிந்தபடி ஒருவர் நம் சித்தரைப் பார்த்து வாருங்கள் என்றார். நான் ஆச்சரியத்துடன் பார்த்தேன். லிங்கமும் காணவில்லை ஒலைச்சுவடியும் காணவில்லை.பின்பு சித்தர் என்னை அவரிடம் அறிமுகம் செய்தார் . அவர் கூறியது : ராஜா , நான் துணையிருக்க சிக்கல்கள் பற்றி கவலை உனக்கு எதற்கு? என் கையில் கவலைகளை எல்லாம் கொடுத்துவிடு. சித்தர் குரலில் "கண்களைத் திற" என்று கேட்டது. கண் விழித்தால் மீண்டும் அதே இடத்தில் லிங்கத்தின் முன் இருந்தேன். ஐயா நாம் எங்குச் சென்றோம் . எப்படிச் சென்றோம்.ஒன்றும் புரியவில்லை சித்தர் : அனைத்திலும் தேர்ச்சி பெற்ற சிவசித்தன். எங்களின் குரு. அனைத்து துரையிலும் தேர்ச்சி பெற்றவர். அவரைக்காண அவர் உலகிற்கு சென்றோம். “ அனி மாதி சித்திகளானவை கூறில் அணுவில் அணுவின் பெருமையின் நேர்மை இணுகாத வேகார் பரகாய மேவல் அணுவத் தனையெங்குந் தானாத லென்றெட்டே ” திருமூலரின் திருமந்திரம், 668வது பாடல் //எண் பெருஞ் சித்திகளின் விளக்கம் அணிமா - அண...
30ஆம் தேதி .. வேலையை முடித்து விட்டு வரும் பொழுது. ரீசார்ஜ் கடையில் ஐம்பது ருபாய்க்கு ரீசார்ஜ் அட்டையை வாங்கி அட்டயை சுரண்டும் போது , தொலைபேசியின் மணி அடித்தது... அட்டையை சட்டைப் பையில் வைத்தபடி தொலைபேசியில்.... "துணைவியார் : என்னங்க குழந்தைக்கு சர்லாக்ஸ் , அப்புறம் அரிசி, பருப்பும் தீந்துடுச்சு வாங்கிட்டுவாங்க." காசு கம்மியா இருக்கே. ஈசி பன்ன கார்டு வாங்கியாச்சே... ரீசார்ஜ் கடையில் மீண்டும் குடுக்க போகும்பொழுது யோ போயா வெளிய கார்டை வேகமா சுரண்டுனா நம்பர் கிழிஞ்சுதான் போகும் அது உன் தப்பு போயா வெளிய... என்று கடையில் சத்தம் வந்தது. உள்ளே நுழைந்து . எப்படி கேட்பது , யோசித்தபடி கார்டை கொடுத்தேன் கடைக்கார தம்பி : அண்ணா கார்டு சுரண்டியாச்சேணா... எப்படி வாங்குறது.. சரி தம்பி என்று திரும்பி வரும்பொழுது சாலை ஓரத்தில் தேங்கி நிற்கும் நீரை தாண்டி நடைபாதையில் காலடி வைத்து அண்ணாச்சி கடையில் வழக்கம்போல் பாதி பணமும் மீதி கடனுக்கும் மளிகை பொருள் வாங்கிவிட்டு செல்லும் வழியில் ஹோட்டலில் வாங்க அண்ணா வாங்க "புரோட்டா தோசை குஸ்கா சிக்கன...
Comments
Post a Comment