Skip to main content

சோறு போடுமா...!

சோறு போடுமா....!

மனிதன் சாப்பிட்ட மூக்காலங்கள் 
தாத்தா: உயிர்வாழ // உழவு செய்ய.
அப்பா: பசிக்காக // படிப்பற்காக.
பேரன்: ருசிக்காகவும்//ரீசார்ஜ் செய்யவுமா?

அப்பொழுது , எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன்.
நெற்கதிரை(நெல்+கதிர்) கதிரடிக்க வாசலில் கட்டு கட்டாக மலை போல் குவித்து வைத்து இருந்தார்கள். நான் அதன் மேல் ஏறி என் அழகான ஊரையும் ஏரிக்கரையும் எருமை மாடுகளையும் பார்த்து ரசித்ததும்,  கையில் குச்சியுடன் மேலே நின்று ஊருக்கே நான் ராஜா போல் ஆனந்தமாக நின்றது ஞாபகம். அப்பொழுது என் தாத்தா கதிரடிக்க, ஆயா அதை தூற்றி  நெல்லைப் பிரித்தவுடன்.  அதை அனைத்தும் முத்து மணியைப்போல் பார்த்து பார்த்து மூட்டையில் அள்ளி எடுத்து வைத்தார். 

நான் : சிதரிய நெல்லை எடுத்து வந்து மூட்டையில் போட்டேன்.

தாத்தா : குச்சிய கீழ போடு , அதை நான் அள்ளிக்கிறன் நீ போய் விளையாடு .

நான் : ஏன் தாத்தா நான் எடுக்க கூடாதா?

தாத்தா : நீயும் உன் அப்பா மாதிரி நல்லா படிச்சு நல்ல வேலைக்கு போகனும். இதெல்லாம் என்னோடு போகட்டும்.

          தொலைவில் புல்லட் சத்தம்  கேட்டவுடன் தாத்தாவிடம் சொல்லிவிட்டு , ஒடிப்போய் அப்பாவைப் பார்த்தேன்.என் கையில் இருக்கும் குச்சியை பிடிங்கி எரிந்துவிட்டு சிரித்தபடியே என் கண்ணத்தில் முத்தமிட்டு கையில் இருக்கும்  தின்பண்டங்களைக் கொடுத்து இந்தா நீயும் உன் தம்பியும் சாப்பிடுங்க என்றார். அப்பா தாத்தாவை அமர வைத்துவிட்டு அவர் வேலையைச் செய்ய தொடங்கினார். அப்பாவிடம் நான்

நான்: அப்பா இந்த நெல்லை அள்ளக்கூடாதா? தாத்தா சொன்னார்.

அப்பா : சிரித்தபடி , அள்ளலாம். ஆனால் எல்லா நேரமும் அள்ள முடியாது. நீ போய் விளையாடு என்றார்.

மனதில் பதிந்து விட்டது ....


சில வருடங்களுக்கு பின்பு:

எல்லா நேரமும் அள்ள முடியாது
அம்மா கூறிய பின்பு தான் நான் உணர்கிறேன் அப்பா ஏன் அப்படி சொன்னார் என்று.

அம்மா கூறியது: அவர் உன்னை கஷ்ட படக்கூடாதுனு சொல்லியிருப்பார். விவசாயம் செய்வது மிக எளிதல்ல. குழந்தையைப்போல் பெற்று எடுக்க வேண்டும். அதற்கு சூரியனின் ஆசிர்வாதம், நீர் நிலை  , நம் மாடுகள் துணையால் காட்டை உழுது ,நீர் தேக்கி, விதை தூவி , நாத்து நட்டு , வளர்ந்து வரும் வரை பாசன நீர் அளவு எல்லாம் சரியாக இருக்க வேண்டும்.சரியாக விளைந்து பின்பு தான் அறுவடை செய்வார்கள். இப்பொழுது ஏறி விளையாடுகிறாய நெற்கதிர் அப்படி தான் வந்தது.அதன்பின் நெல்லை அவித்து காயவைத்து அரைத்த பின் அரிசி தனி உமி
தனியாக வந்துவிடும். 

நான் : இந்த வேலை எல்லாரும் செய்யலாமே. அப்பாவிற்கு தாத்தா சொல்லி கொடுத்தார் . எனக்கு அப்பா இதைப்பற்றி சொல்லவே இல்லை.

அம்மா :விவசாயத்தைக் கற்றுக்கொண்டு செய்யலாம் தான்.ஆனால் எல்லா நேரமும் மழை , காற்று , வெயில் , பணம்  இவையால் சூழ்நிலைகளால் மாறும். மாறினால் , பின்விளைவுகள் வலிகள் மிகுந்தவை. பயிர்கள் கருகிப்போகும், நெல் கிடைக்காது. நெல் கிடைக்கவில்லை என்றால் பணம் நேரம் உழைப்பு அனைத்தும் வீண். யோசித்து பார் உன் வயதில் உன் அப்பா காலை சாணி அள்ளிவிட்டு , பழைய நீச்சத்தண்ணீக் குடித்து விட்டு மாலை வந்தும் மேய்கின்ற  மாட்டை கட்டிவிட்டு படிப்பார்,  வீட்டு வேலை சமைக்க உன் அத்தைகள் செய்து  வைப்பார்கள்.ஆயா தாத்தா கூலி வேலைக்கும் போவார்கள். கல்லூரி பருவத்தில் நம் ஊரில் இருந்து 35km சைக்கிளில்  சேலம் கலைக் கல்லூரிக்குச் செல்வார். வார இறுதியில் கிணறு வெட்டச் செல்வார். பசிக் கண்ணை கட்டும். ஒருவேளை கூழ் மட்டுமே கிடைக்கும். நம் ஆயா கூலிவேளை செய்தும் , கால் கொலுசு கொடுத்து தான் படிக்க வைத்தார். இருநூறு ரூபாய் இல்லாமல் மேற்கொண்டு படிக்க முடியவில்லை. இருந்தும் அவர் படித்த BA (co-op)க்கு இரண்டு வேலை வந்தது வங்கியிலும், காவல்துறையிலும். காவல்துறையில் சேர்ந்தார் உன் அப்பா. வறுமை, பசி, விடுமுறை இல்லை, கடினமான கல்லூரி இன்னும் பல....

அதனால் தான் உன் கையில் குச்சியை பார்த்தால் தூக்கி எரிவார்.அந்த வலி வறுமை பசி இந்த கொடிய நிலமை உனக்கு வரக்கூடாது. நீ தாத்தாவிற்காக விவசாயமும் அப்பாவிற்காக  வேளாண்மையும் படிக்க ஆசைபடுகிறேன்.

நான் : சரிமா நான் படிக்கிறேன் இப்ப பசிக்குது  
சோறு போடுமா.

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்
உயர்வுக்கு படிப்பு // உணவுக்கு விவசாயம் .

 குறிப்பு:
பஞ்சம் - உணவுப் பற்றாக்குறை       
👇
பசி - உணர்வு ( உணவு தேவை )
👇
பட்டினி - பலநாள் பசியின் நிலை
👇 
பட்டினிச் சாவு 
இது எதும் வராமல் நாம் அனைவரும் பட்டினி இல்லாத பயணிப்போம்.

குறள்:
"உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல்"
பொருள்:
யாவரும் உண்ணுவதற்கு உணவைத் தந்து, தாமும் உண்டு வாழ்பவரே உரிமை வாழ்வினர்; மற்றையவர் பிறரைத் தொழுது உண்டு, அவர் பின் செல்கின்றவரே யாவர்

உழவர்களுக்கு
மாடுகளுக்கு 
நீருக்கு 
மண்ணிற்கு 
காற்றுக்கு 
இவை அனைத்தும் பரிசளித்த 
உணவிற்கு 
என் நன்றியை தெரிவுத்துக் கொள்கிறன்.





Comments

Popular posts from this blog

இன்று முற்பது 🥺 நாளை ஒன்று😊

30ஆம் தேதி .. வேலையை முடித்து விட்டு வரும் பொழுது. ரீசார்ஜ் கடையில் ஐம்பது ருபாய்க்கு ரீசார்ஜ் அட்டையை வாங்கி அட்டயை சுரண்டும் போது , தொலைபேசியின் மணி அடித்தது... அட்டையை சட்டைப் பையில் வைத்தபடி  தொலைபேசியில்.... "துணைவியார் :  என்னங்க குழந்தைக்கு சர்லாக்ஸ் , அப்புறம் அரிசி, பருப்பும் தீந்துடுச்சு வாங்கிட்டுவாங்க." காசு கம்மியா இருக்கே. ஈசி பன்ன கார்டு வாங்கியாச்சே... ரீசார்ஜ் கடையில் மீண்டும் குடுக்க போகும்பொழுது   யோ போயா வெளிய கார்டை வேகமா சுரண்டுனா நம்பர் கிழிஞ்சுதான் போகும் அது உன் தப்பு போயா வெளிய... என்று கடையில் சத்தம் வந்தது. உள்ளே நுழைந்து . எப்படி கேட்பது , யோசித்தபடி கார்டை கொடுத்தேன்  கடைக்கார தம்பி : அண்ணா கார்டு சுரண்டியாச்சேணா... எப்படி வாங்குறது.. சரி தம்பி என்று   திரும்பி வரும்பொழுது  சாலை ஓரத்தில் தேங்கி நிற்கும் நீரை தாண்டி நடைபாதையில் காலடி வைத்து அண்ணாச்சி கடையில் வழக்கம்போல் பாதி பணமும் மீதி கடனுக்கும் மளிகை பொருள்  வாங்கிவிட்டு செல்லும் வழியில்   ஹோட்டலில் வாங்க அண்ணா வாங்க  "புரோட்டா தோசை குஸ்கா சிக்கன...

படைத்தவனை படைத்தவன்

படைத்தவனை படைத்தவன் இயற்கையால் படைக்கப்பட்டவன்தான்.இதில் செயற்கையாக கதைக் கூறி படைத் திரட்டி பெரியவன் யார் என்று, நிகழ்த்தமுயன்று பாடையேறி நிழலாய் போனவர்களையே வரலாறு நமக்குப் பாடம் எடுக்கிறது. பாடத்தைக் கவனிக்காமல் மதியிழந்து, அறத்துடன் வாழ்வதையே ஆச்சரியமாக பார்த்து விட்டார்கள்.  எடுத்து காட்டு : குடும்பத் தலைவன் தனது குடும்ப நலனுக்காக உழைப்பதை ஆச்சரியமாகவும், அம்மா குழந்தைக்கு தாய்பால் கொடுப்பது  இயற்கையானதோ அறத்துடன் வாழ்வதும் இயற்கையானது.  ஒரு எறும்பு பிறந்து , வாழ்நாள் முழுதும் உழைத்து உண்டு இறந்த பின் எதுவும் நடப்பதில்லை. அந்த உயிர்க்கு எப்படி ஆவியாக மாறவோ , மறு ஜென்மோ ஒன்றில்லை. ஆனால் வாழும் முறை வேறு . தனிதன்மையால் வேறுபடுகிறோமே தவிர எல்லா உயிர்களும் சமம்.   மண்ணில் இருந்து வந்த எல்லா உயிர்களும் மண்ணிலே போகிறது. யோசிக்கலாம் எறும்புக்கு கல்விக் கடன் ,கல்யாணக் கடன்,மளிகைக் கடன், வண்டிக் கடன் ,வீட்டுக் கடன்,தவணைக் கடன் இதில் சிலருக்கு காலைக்கடனும் இன்று சிக்கலானது. ஆனால் பசியால் வரும் வலி எல்லா உயிர்களுக்கு ஒன்று தான். ●அன்பு அரவணைப்பு ஆசை மகிழ்ச்சி காமம் து...