Skip to main content

உருவமில்லா_நிழல் III


டென்டே துணை

 

பகுதி3 

8ஆம் வகுப்பு : பள்ளி நாட்களில் காலாண்டு முடிந்த பின்பு சுற்றுலா அழைத்துச் செல்வது வழக்கம். அந்த நாளும் வந்தது , பேரமணர் என்ற மலைமேல் இருக்கும் பூங்காடு என்ற ஊர் அருகே இரண்டு மைல்கள் தூரம்  ட்ரக்கிங்  செய்து உடல் அசதியுடன் அமர்ந்தோம். அங்கே நான் கண்ட காட்சி மாலை ஆறு மணி இருக்கும் "உருவம் இல்லை ஆனால் நிழல் இருந்தது". அசதியில் எனது மூலை எதையும் யோசிக்காதே என்று சொல்லியதோ என்னமோ நான் என் நண்பர்களுடன் பேசிய படி  தூங்கிவிட்டேன் இரவு இரண்டு மணி இருக்கும் , சிறுநீர் கழிக்க டென்டை திறந்து வெளியே பார்த்தேன் .  அங்கே கேம்ப் ஃபையர் ஏரிந்த படி இருக்க , அந்த மரப்பலகையில் மஞ்சள் பொடி தூவிய மாதிரி ஒரு உருவம். அதைப்பார்த்து , டென்டில் அமர்ந்த படியே மூச்சை கூட விடாமல் வாயை பொத்திக்கொண்டு டென்டை மூடிவிட்டேன். மாலையில் கண்ட காட்சி கண்ணில் வந்து போனது. அமைதியாக சிறுநீரை அடக்கிக் கொண்டு அமர்ந்தேன். டென்டின் மிக அருகிலே பலத்த மூச்சு வாங்கியபடி சத்தம்   ஷ்ஷ்ஸ்ஷ் . அனைத்து பேய் கதைகளும் கண் முன்னே வந்தது , பயம் ஆரம்பிக்க தொடங்கியது. டென்டில்....

......தொடரும்...... 


முந்தைய கதை படிக்க 

பகுதி1

பகுதி2

பகுதி 4


Comments

Popular posts from this blog

உருவமில்லா_நிழல் XI

பகுதி XI நம் வாழ்வின் தொடக்கம் இது. ஓலைச்சுவடி படித்தப் பின்பு சித்தர் : உனது பிரச்சனைக்கு தீர்வு கிடைத்தது. நீ தேர்ந்தெடுக்க பட்டவன் ராஜா... ராஜா : அந்த நிழல் உருவம் அழைத்தது  சித்தர் : உன்னை பித்து பிடிக்கச் செய்வதற்காக. சித்தர் : ஐயன் கூறியது. எனக்கு நிலை மேம்படவும் உனக்கு துவக்க நிலை தொடங்க இந்த நிகழ்வு. ராஜா: ஒன்றும் புரியவில்லை. சித்தர் : ஒவ்வொரு நிலை கடக்கும்பொழுது நிறம் மூலமாக எனக்கு அறிகுறி காமிப்பான் என் ஐயன். ராஜா : ஐயா .... ஒரே குழப்பம். சித்தர் : ராஜா... தெளிவாக கவனி நான் மெய்யியல் கோட்பாட்டை அடைய பயிற்சி செய்துவருகிறேன். நாம் பார்த்தது சிவனை அல்ல மெய்யியல் கோட்பாட்டில் முனைவர் நிலை அடைந்தவர். அந்த மஞ்சள் புடவை கட்டிய பெண்மனி வந்தது என் கடை நிலையின் துவக்கம் , அதாவது உச்சநிலை தொடங்க வழி . நீ கருப்புசாமி வணங்கக் காரணம் உன் துவக்க நிலை தொடங்கத்தான். கருப்பு  நீலம் பச்சை   சிகப்பு   மஞ்சள்   வெள்ளை இந்த ஆறு வண்ணங்கள்  தான் படிநிலைகளாக உள்ளன முன்னேறி உச்சநிலை அடையவும்.      மக்களுக்கு செம்மையாகவும் நன்னெறிகளைப் போதித்து  மக்கள...

இன்று முற்பது 🥺 நாளை ஒன்று😊

30ஆம் தேதி .. வேலையை முடித்து விட்டு வரும் பொழுது. ரீசார்ஜ் கடையில் ஐம்பது ருபாய்க்கு ரீசார்ஜ் அட்டையை வாங்கி அட்டயை சுரண்டும் போது , தொலைபேசியின் மணி அடித்தது... அட்டையை சட்டைப் பையில் வைத்தபடி  தொலைபேசியில்.... "துணைவியார் :  என்னங்க குழந்தைக்கு சர்லாக்ஸ் , அப்புறம் அரிசி, பருப்பும் தீந்துடுச்சு வாங்கிட்டுவாங்க." காசு கம்மியா இருக்கே. ஈசி பன்ன கார்டு வாங்கியாச்சே... ரீசார்ஜ் கடையில் மீண்டும் குடுக்க போகும்பொழுது   யோ போயா வெளிய கார்டை வேகமா சுரண்டுனா நம்பர் கிழிஞ்சுதான் போகும் அது உன் தப்பு போயா வெளிய... என்று கடையில் சத்தம் வந்தது. உள்ளே நுழைந்து . எப்படி கேட்பது , யோசித்தபடி கார்டை கொடுத்தேன்  கடைக்கார தம்பி : அண்ணா கார்டு சுரண்டியாச்சேணா... எப்படி வாங்குறது.. சரி தம்பி என்று   திரும்பி வரும்பொழுது  சாலை ஓரத்தில் தேங்கி நிற்கும் நீரை தாண்டி நடைபாதையில் காலடி வைத்து அண்ணாச்சி கடையில் வழக்கம்போல் பாதி பணமும் மீதி கடனுக்கும் மளிகை பொருள்  வாங்கிவிட்டு செல்லும் வழியில்   ஹோட்டலில் வாங்க அண்ணா வாங்க  "புரோட்டா தோசை குஸ்கா சிக்கன...

NPE / நான் பார்த்தேன் என்னை.