Skip to main content

உருவமில்லா_நிழல் IV

பகுதி4
பேரமணர் மலை

டென்டில் இரவு அமர்ந்த படியே தூங்கிவிட்டேன்.சுமார் ஐந்து மணி அடக்க முடியாமல் வெளியே வந்தேன் , சுற்றியும் பணி. அருகிலே குட்டை ,  அதன் அருகில் சென்று சிறுநீரை கழித்து விட்டு திரும்பும் போது , ஒரு உருவம் தூரத்தில் துனி இல்லாமல் ,மெலிந்த உடல் , ஜடா முடி ...  கண்ணைத்திறந்தால் டென்டில் இருந்தேன்.   காலையில் பயந்தபடி வாத்தியாரிடம் கூறினேன். அவர் சிரித்தபடி  மடையா போய் எல்லாம் எடுத்து வை என்றார். ஆனால் என் மனதில் பயம் தெளிய வில்லை. அன்று மாலையே வீடு திரும்பினோம். அம்மாவிடம் அந்த நிகழ்வை சொன்னேன். அனைத்தையும் கேட்ட உடன் ,அது காட்டு வாசி இல்லைனா சாமியாரா இருக்கும். அதன்பின் சாமி தட்டில் இருந்த விபூதியை எடுத்து தலையில் தூவிய பின்பு , எதுவும் இல்ல நல்லா தூங்கு சரியாகி விடும், சாமி இருக்கு கவலைப்படாதே என்றார்.
அடுத்த நாள் பள்ளியில் , பூங்காடு ஊரில் இருக்கும் நண்பனிடம் இதைப்பற்றி கேட்டேன்.

ராஜா : டேய் , உங்க ஊர்ல  இருக்க அந்த மலையில யாராச்சு இருக்காங்களா?

நண்பன்: நேத்து போனது அது மலை அடிவாரம் தான், சித்தர் ஆவியாக உலாவரங்கனு சொல்லுவாங்க 

ரா: டேய் சித்தரா இல்ல ஆவியா.. ?

ந : மலை பேர் என்ன சொல்லு பாக்கலாம்.

ரா: பேரமணர் மலை.

ந: எனக்கே தெரியாதுடா , எங்க ஆயா கிட்ட கேட்டு சொல்லுரேன் 

நாங்க பேச தொடங்கினோம் டென்டில் நடந்ததை...

... தொடரும்...



Comments

Post a Comment

Popular posts from this blog

உருவமில்லா_நிழல் XI

பகுதி XI நம் வாழ்வின் தொடக்கம் இது. ஓலைச்சுவடி படித்தப் பின்பு சித்தர் : உனது பிரச்சனைக்கு தீர்வு கிடைத்தது. நீ தேர்ந்தெடுக்க பட்டவன் ராஜா... ராஜா : அந்த நிழல் உருவம் அழைத்தது  சித்தர் : உன்னை பித்து பிடிக்கச் செய்வதற்காக. சித்தர் : ஐயன் கூறியது. எனக்கு நிலை மேம்படவும் உனக்கு துவக்க நிலை தொடங்க இந்த நிகழ்வு. ராஜா: ஒன்றும் புரியவில்லை. சித்தர் : ஒவ்வொரு நிலை கடக்கும்பொழுது நிறம் மூலமாக எனக்கு அறிகுறி காமிப்பான் என் ஐயன். ராஜா : ஐயா .... ஒரே குழப்பம். சித்தர் : ராஜா... தெளிவாக கவனி நான் மெய்யியல் கோட்பாட்டை அடைய பயிற்சி செய்துவருகிறேன். நாம் பார்த்தது சிவனை அல்ல மெய்யியல் கோட்பாட்டில் முனைவர் நிலை அடைந்தவர். அந்த மஞ்சள் புடவை கட்டிய பெண்மனி வந்தது என் கடை நிலையின் துவக்கம் , அதாவது உச்சநிலை தொடங்க வழி . நீ கருப்புசாமி வணங்கக் காரணம் உன் துவக்க நிலை தொடங்கத்தான். கருப்பு  நீலம் பச்சை   சிகப்பு   மஞ்சள்   வெள்ளை இந்த ஆறு வண்ணங்கள்  தான் படிநிலைகளாக உள்ளன முன்னேறி உச்சநிலை அடையவும்.      மக்களுக்கு செம்மையாகவும் நன்னெறிகளைப் போதித்து  மக்கள...

இன்று முற்பது 🥺 நாளை ஒன்று😊

30ஆம் தேதி .. வேலையை முடித்து விட்டு வரும் பொழுது. ரீசார்ஜ் கடையில் ஐம்பது ருபாய்க்கு ரீசார்ஜ் அட்டையை வாங்கி அட்டயை சுரண்டும் போது , தொலைபேசியின் மணி அடித்தது... அட்டையை சட்டைப் பையில் வைத்தபடி  தொலைபேசியில்.... "துணைவியார் :  என்னங்க குழந்தைக்கு சர்லாக்ஸ் , அப்புறம் அரிசி, பருப்பும் தீந்துடுச்சு வாங்கிட்டுவாங்க." காசு கம்மியா இருக்கே. ஈசி பன்ன கார்டு வாங்கியாச்சே... ரீசார்ஜ் கடையில் மீண்டும் குடுக்க போகும்பொழுது   யோ போயா வெளிய கார்டை வேகமா சுரண்டுனா நம்பர் கிழிஞ்சுதான் போகும் அது உன் தப்பு போயா வெளிய... என்று கடையில் சத்தம் வந்தது. உள்ளே நுழைந்து . எப்படி கேட்பது , யோசித்தபடி கார்டை கொடுத்தேன்  கடைக்கார தம்பி : அண்ணா கார்டு சுரண்டியாச்சேணா... எப்படி வாங்குறது.. சரி தம்பி என்று   திரும்பி வரும்பொழுது  சாலை ஓரத்தில் தேங்கி நிற்கும் நீரை தாண்டி நடைபாதையில் காலடி வைத்து அண்ணாச்சி கடையில் வழக்கம்போல் பாதி பணமும் மீதி கடனுக்கும் மளிகை பொருள்  வாங்கிவிட்டு செல்லும் வழியில்   ஹோட்டலில் வாங்க அண்ணா வாங்க  "புரோட்டா தோசை குஸ்கா சிக்கன...

NPE / நான் பார்த்தேன் என்னை.