Skip to main content

Posts

Showing posts from September, 2024

தேய்ந்துபோகிறோம்

 தேவையில்லாததை தேவையில்லாமல் தேடி  தேய்ந்துபோகிறோம்

இன்று முற்பது 🥺 நாளை ஒன்று😊

30ஆம் தேதி .. வேலையை முடித்து விட்டு வரும் பொழுது. ரீசார்ஜ் கடையில் ஐம்பது ருபாய்க்கு ரீசார்ஜ் அட்டையை வாங்கி அட்டயை சுரண்டும் போது , தொலைபேசியின் மணி அடித்தது... அட்டையை சட்டைப் பையில் வைத்தபடி  தொலைபேசியில்.... "துணைவியார் :  என்னங்க குழந்தைக்கு சர்லாக்ஸ் , அப்புறம் அரிசி, பருப்பும் தீந்துடுச்சு வாங்கிட்டுவாங்க." காசு கம்மியா இருக்கே. ஈசி பன்ன கார்டு வாங்கியாச்சே... ரீசார்ஜ் கடையில் மீண்டும் குடுக்க போகும்பொழுது   யோ போயா வெளிய கார்டை வேகமா சுரண்டுனா நம்பர் கிழிஞ்சுதான் போகும் அது உன் தப்பு போயா வெளிய... என்று கடையில் சத்தம் வந்தது. உள்ளே நுழைந்து . எப்படி கேட்பது , யோசித்தபடி கார்டை கொடுத்தேன்  கடைக்கார தம்பி : அண்ணா கார்டு சுரண்டியாச்சேணா... எப்படி வாங்குறது.. சரி தம்பி என்று   திரும்பி வரும்பொழுது  சாலை ஓரத்தில் தேங்கி நிற்கும் நீரை தாண்டி நடைபாதையில் காலடி வைத்து அண்ணாச்சி கடையில் வழக்கம்போல் பாதி பணமும் மீதி கடனுக்கும் மளிகை பொருள்  வாங்கிவிட்டு செல்லும் வழியில்   ஹோட்டலில் வாங்க அண்ணா வாங்க  "புரோட்டா தோசை குஸ்கா சிக்கன...

சுயமரியாதை

முன்பு உயிருக்குச் சமமாக இருந்தது, பின்பு வீட்டு வாடகைத் தேதி தள்ளிப்போனாலே இழந்தது என் சுயமியாதை

அப்பா♥️

என்றும் நினைவில்❤️

அம்மா உன்னால் நான் உன்னில் நான் உனக்காக நான் உன்னுடையவன் நான் உனதாகிய நான் உலகின் உண்மையான ஊக்கமான உறவு எனது அம்மாவிற்கு -உன்மகன் என்றும் நினைவுடன் 20/09/2018

உருவமில்லா_நிழல் XI

பகுதி XI நம் வாழ்வின் தொடக்கம் இது. ஓலைச்சுவடி படித்தப் பின்பு சித்தர் : உனது பிரச்சனைக்கு தீர்வு கிடைத்தது. நீ தேர்ந்தெடுக்க பட்டவன் ராஜா... ராஜா : அந்த நிழல் உருவம் அழைத்தது  சித்தர் : உன்னை பித்து பிடிக்கச் செய்வதற்காக. சித்தர் : ஐயன் கூறியது. எனக்கு நிலை மேம்படவும் உனக்கு துவக்க நிலை தொடங்க இந்த நிகழ்வு. ராஜா: ஒன்றும் புரியவில்லை. சித்தர் : ஒவ்வொரு நிலை கடக்கும்பொழுது நிறம் மூலமாக எனக்கு அறிகுறி காமிப்பான் என் ஐயன். ராஜா : ஐயா .... ஒரே குழப்பம். சித்தர் : ராஜா... தெளிவாக கவனி நான் மெய்யியல் கோட்பாட்டை அடைய பயிற்சி செய்துவருகிறேன். நாம் பார்த்தது சிவனை அல்ல மெய்யியல் கோட்பாட்டில் முனைவர் நிலை அடைந்தவர். அந்த மஞ்சள் புடவை கட்டிய பெண்மனி வந்தது என் கடை நிலையின் துவக்கம் , அதாவது உச்சநிலை தொடங்க வழி . நீ கருப்புசாமி வணங்கக் காரணம் உன் துவக்க நிலை தொடங்கத்தான். கருப்பு  நீலம் பச்சை   சிகப்பு   மஞ்சள்   வெள்ளை இந்த ஆறு வண்ணங்கள்  தான் படிநிலைகளாக உள்ளன முன்னேறி உச்சநிலை அடையவும்.      மக்களுக்கு செம்மையாகவும் நன்னெறிகளைப் போதித்து  மக்கள...

உருவமில்லா_நிழல் X

பகுதி10 .. துளைப்பவன்   கண்களை மூடிய பின்பு வெளிச்சம் அதிகமாக தொடங்கியது வழக்கத்திற்கு மாறாக. திறந்து பார்த்தால் வேரு இடத்தில் இருந்தோம். புலித்தோல் அணிந்தபடி ஒருவர் நம் சித்தரைப் பார்த்து வாருங்கள் என்றார். நான் ஆச்சரியத்துடன் பார்த்தேன். லிங்கமும் காணவில்லை ஒலைச்சுவடியும் காணவில்லை.பின்பு சித்தர் என்னை அவரிடம் அறிமுகம் செய்தார் .  அவர் கூறியது   : ராஜா , நான் துணையிருக்க சிக்கல்கள் பற்றி கவலை உனக்கு எதற்கு? என் கையில் கவலைகளை எல்லாம் கொடுத்துவிடு. சித்தர் குரலில் "கண்களைத் திற" என்று கேட்டது. கண் விழித்தால் மீண்டும் அதே இடத்தில் லிங்கத்தின் முன் இருந்தேன். ஐயா நாம் எங்குச் சென்றோம் . எப்படிச் சென்றோம்.ஒன்றும் புரியவில்லை சித்தர் : அனைத்திலும் தேர்ச்சி பெற்ற சிவசித்தன். எங்களின் குரு. அனைத்து துரையிலும் தேர்ச்சி பெற்றவர். அவரைக்காண அவர் உலகிற்கு சென்றோம். “  அனி மாதி சித்திகளானவை கூறில் அணுவில் அணுவின் பெருமையின் நேர்மை இணுகாத வேகார் பரகாய மேவல் அணுவத் தனையெங்குந் தானாத லென்றெட்டே ” திருமூலரின் திருமந்திரம், 668வது பாடல் //எண் பெருஞ் சித்திகளின் விளக்கம் அணிமா - அண...

வலியும்●வரியும்

பறக்கிறது என் பணம் ஏடிஎம் கார்டு புறாவைப்போல் ● பாதி என் வலிக்கு ● மீதி என் வரிக்கு ● @hmk

நீ என் நூலகம்♥️

உனது நூலில்  ஒரு வார்த்தையாக  துடிக்கிறேன் நான்..  ஆனால் நீயோ எனது நூலகம்.... ❤️  

உருவமில்லா_நிழல் IX

பகுதி 9  அக்காவும் ஓலைச்சுவடியும்   வர டீ-யைக் குடித்துவிட்டு , கிணற்றில் குளிக்கப் போவதாக பொய் சொல்லி பேரமணர் மலை அடிவாரம் சென்றேன் சித்தரைக்காண.. ஊர் எல்லையில் கம்பிரமாக நம்மை காக்கும் கருப்பு சாமியையும்,  ஏழு கன்னிமார்களையும் கும்பிட்டுவிட்டு மலைமேல் நோக்கி சென்றேன்.தூரத்தில் ஒரு அக்கா மஞ்சள் சேலையோடு தலைமுழுதும் மல்லிகைப் பூ வைத்தபடி ஒரு கையில் கம்போடும் இன்னொருக் கையில் பழைய மூட்டை இருப்பதை பார்த்தேன் . ஆடு மேய்ப்பவர் என்று எண்ணினேன். இதற்கு முன்பு ஊர் ஏரிக்கரையில் பார்த்த ஞாபகம் . "இருட்டும் முன் நான் சித்தரை பார்த்து எனக்கு தீர்வுகாண வேண்டும் என்று" எனது எண்ணோட்டமாக இருந்தது. அதனால் ஓடினேன்  அந்த அக்காவிடம் பேசத் தொடங்கினேன். நான் : அக்கா ,ஒர் உதவி உங்களுக்கு சாமியார் இருக்குமிடம் தெரியுமா.. அக்கா: சாமியாரா..? நான் : இல்லை இல்லை சித்தர்.. அக்கா : சித்தரா.. இன்று பௌர்ணமி , அதனால் என்னப்பனை வழிபாடு செய்ய சென்றிருப்பார். நான் : புரியவில்லை அக்கா. அக்கா : மலை மேலே லிங்கம் இருக்கும் , அங்கே போய் பார்.  நான் : அக்கா தனிமையில் செல்ல பயமாக உள்ளது , நீ...